ஒரு தீவிரவாத தலைவனை போல, ஆப்கானிய தாலிபன் போல, காஷ்மீர் தீவிரவாதிகளின் பயிற்றுனர் போல

என்மேல் எத்தனை வழக்கு என எனக்கே தெரியாது, உன் மேல் 10 வழக்காவது இருக்க வேண்டும், சட்டம் என்ன செய்யும்? இதை தவிர ஒன்றும் செய்யாது என அந்த திருமா தன் தொ(கு)ண்டர்களுக்கு பாடமெடுக்கும் அளவு இந்திய சட்டம் பலவீனமாக உள்ளது என்பதுதான் வேதனை

எப்படிபட்ட ஆணவமான பேச்சு?

ஒரு தீவிரவாத தலைவனை போல, ஆப்கானிய தாலிபன் போல, காஷ்மீர் தீவிரவாதிகளின் பயிற்றுனர் போல அவர் என்னவெல்லாமோ பொது வெளியில் பேசுவதெல்லாம் ஆபத்து

பொதுசொத்தை சேதபடுத்துவது நாட்டிற்கு செய்யும் துரோகம், அழிவு என்பதை மறைத்து அப்படி செய்தால் என்னென்ன பலவீனமான சட்ட ஓட்டைபடி தப்பலாம் என ஒரு தலைவன் பேசுவார் என்றால் அவர் இந்நாட்டின் துரோகியாக இருக்கமுடியுமே தவிர வழிகாட்டியாக இருக்க முடியாது

அந்நிய கைகூலி ஒருவரே இப்படி எதிரிநாட்டின் சிந்தனைகளை இங்கு பரப்பமுடியும், நிச்சயம் இந்த நாட்டை மதிக்கும் , நேசிக்கும் ஒரு தலைவனால் இப்படி பேசமுடியாது

அதுவும் ஒரு எம்பி இப்படியெல்லாம் பேசுவது, சட்ட பலவீனத்தை பயன்படுத்தி என்னவெல்லாமோ செய்ய பேசுவது மாபெரும் அவமானம், அப்பட்டமான சட்டமீறல்

இதெல்லாம் இந்திய திருநாட்டின் சட்டத்தின் பெரும் பலவீனத்தை காட்டுகின்றது, அந்த சட்டங்களை மாற்றாமல் இனி பொது அமைதி இல்லை,

இன்னும் இந்த பலவீனமான வேலிகள் இருந்தால் சிறுத்தைகள் மட்டுமல்ல, கரடிகள், நீர்யானைகள், பாம்புகள், முதலைகள் என மிருகங்கள் உலாவும் இடமாக தேசம் மாறிவிடும் பின் அதனை மீட்டெடுப்பது சுலபமல்ல

திருமாவின் பேச்சு என்பது நாடாளுமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவு வீரியமானது, சிந்திக்க வேண்டியவர்க்ள் இதுபற்றி சிந்திக்கட்டும்

தமிழக சட்டம் ஒழுங்கை கவனிக்கும் காவல்துறையும் தமிழக அரசும் இதையெல்லாம் குறித்துகொள்ள வேண்டும்