ஒரு நாடக கம்பெனி இப்பொழுது சர்கஸ் கம்பெனியாகி விட்டது
அக்கட்சியின் முதல்வர்களை யாரும் பேசிவிட முடியாது, எம்ஜிஆரை விமர்சித்தவர்கள் உயிருக்கே ஆபத்து என்றொரு நிலை இருந்தது
ஜெயா பற்றி பேசிவிட்டால் நீதிமன்றத்திலே தங்கிவிடும் அளவிற்கு வழக்குகள் பாயும். அவதூறு வழக்கு போடுவதற்கு என்றே ஒரு வழக்கறிஞர் அணி அவரிடம் இருந்தது.
அப்படிபட்ட அதிமுகவின் இப்போதைய முதல்வரை ஒருவர் 420 என அழைக்கின்றார், பதிலுக்கு முதல்வரும் நீ 420, உன் தாத்தா 420 என பள்ளிகுழந்தை போல சொல்லிகொண்டிருக்கின்றார்.
எம்ஜிஆர், ஜெயா பாணியிலிருந்து எவ்வளவு விலகிவிட்டார் பழனிச்சாமி?
எப்படியோ ஒரு நாடக கம்பெனி இப்பொழுது சர்கஸ் கம்பெனியாகி விட்டதுதான் தமிழக ஆறுதல்..