ஒரு நாடோ மாநிலமோ வளர துறைமுகம் அவசியம்
ஒரு நாடோ மாநிலமோ வளர துறைமுகம் அவசியம், இந்தியாவில் துறைமுகம் கொண்ட மாநிலங்கள் எல்லாம் கடும் வளர்ச்சியினை எட்டும்
குஜராத் , மும்பை, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, வங்காளம் வரை அப்படித்தான்
கடலோர மாநிலங்களின் வளர்ச்சி 4 பக்கமும் நிலத்தால் சூழ்ந்த மாநிலங்களுக்கு கிடைக்காது
நாடுகளில் கூட நேபாளம், மங்கோலியா, தர்கிஸ்தான் இன்னும் பல நாடுகள் இச்சிக்கலுக்கு ஆளாகும்
கடல் இல்லா நாடுகளை போல, கடல் இல்லா மாநிலங்களும் கடும் சிக்கலை எதிர்கொள்ளும்
கடல் என்பதும் துறைமுகம் என்பதும் பெரும் வளம், தமிழகத்திற்கு அது கிடைத்தது, மும்பைக்கு கிடைத்தது, குஜராத்திற்கு கிடைத்தது
இதனால் இவை எல்லாம் வளர்ந்தன
பீகார், மபி, உபி எல்லாம் இந்த வளம் கிடைக்காமல் சிக்கி கொண்டன
இதற்காக பெரியார்தான் தமிழகத்தை வளர்த்தார், திமுகதான் வளர்த்தது என்பதெல்லாம் அபத்தம், இவர்கள் வரவில்லை என்றால் தமிழகம் பீகார் போல் ஆகியிருக்கும் என்பதெல்லாம் உளறல்
மும்பை, கொச்சி எல்லாம் பெரியாரால்தான் வளர்ந்ததா? என கேட்டால் பதிலுக்கு சங்கி என்பார்கள்
ஒருவேளை பெரியார் பீகாரிலோ அல்லது மபியிலோ பிறந்து அங்கு திமுக போல உருவானால் கடலை உருவாக்காக்கி இருப்பார்களோ என்னமோ?