ஒரு பெண்கவிஞர் கிடைத்த நாள் இன்று..
மனுஷ்யபுத்திரர்க்கு இன்னும் பிரபலமாக என்ன செய்யலாம் என யோசித்திருகின்றார்
மோடியினை பற்றி அவர் என்ன எழுதினாலும் பதில் இல்லை, மோடிக்கு தமிழ் தெரியாது தெரிந்தாலும் இவர் கவிதை புரியாது
யாரை பற்றி எழுதினாலும் கண்டுகொள்ளவில்லை
இதனால் மனிதர் “கருத்து கஸ்தூரி” பக்கம் சாடிவிட்டார், அந்த அம்மணியும் மனுஷ்யபுத்திரன் போல யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என வருத்தத்தில் இருந்ததால் கடும் உற்சாகம்
இருவரும் கவிதையாக எழுதி தள்ளுகின்றார்கள், ஆச்சரியமாக கஸ்தூரியின் கவிதை மனுஷ்யபுத்திரன் கவிதையினை விட நன்றாக இருப்பதாக முகநூல்வாசிகள் சொல்லிவிட்டதால் மனுஷ் அப்செட்
சிலர் ஒருபடி மேலே போய் “மனுஷ், அந்த சுஜாதா விருதை கஸ்தூரிக்கு கொடுத்தால் என்ன?” என்ற அளவிற்கு சென்றாயிற்று
அவள் கவிஞை அல்ல நானே கவிஞன் என மறுபடியும் கவிதை எழுதினார் மனுஷ்
“அவன் கவிஞை ஆக்கினான் என்னை.. ” என கஸ்தூரியும் விடுவதாக இல்லை
கஸ்தூரியினை வைத்தாவது உருப்படியான கவிதை எழுதிவிட வேண்டும் என மனுஷ் முட்டினாலும் சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பதால் ஒன்றும் வரவில்லை
அவர் மொக்கை கவிதையாய் வீச, கஸ்தூரி அட்டகாச கவிதைகளை வீசி கொண்டிருக்கின்றார்,
மனுஷ புத்திரனா? மனுஷ மூத்திரனா என அம்மணி கேட்ட கேள்வியில் மனிதர் அரண்டே விட்டார்.
சண்டை தொடர்கின்றது
இருவரும் ஒருவரை வைத்து ஒருவர் பிரபலமாகிவிட வேண்டும் என துடிக்கின்றார்கள் அவர்கள் நம்பிக்கை எப்படி
என்ன செய்வது?
இவருக்கு சிக்கியவர் அவர்தான், அவருக்கு சிக்கியவர் இவர்தான்
புலவர்களே சண்டை வேண்டாம், சாந்தமாக உரையாடுங்கள் என சங்கம் இருவருக்கும் கோரிக்கை வைக்கின்றது
கஸ்தூரி ஏன் இவ்வளவு சிரமபட வேண்டும்?
“ஏ மனுஷ் இந்த கவிதை பில்டப், ஏமாற்று வேலை எல்லாம் முக ஸ்டாலினோடு வைத்துகொள், அவர் ஏமாறுவார். என்னிடம் இப்படி பிலிம் காட்டினால் நடப்பதே வேறு” என சொல்லியிருந்தால் திமுக மேலிடமே மனுஷை அடக்கி இருக்கும்
கஸ்தூரி இதை சொல்லிவிட்டுத்தான் விவாதத்தை நிறுத்துவார் என சங்கம் ஆவலோடு காத்திருக்கின்றது.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு பெண்கவிஞர் கிடைத்த நாள் இன்று..
கஸ்தூரி எழுதியது அட்டகாசமான கவிதையா . நல்ல ஜோக் தான் . மூக்க புடிச்சிக்கிட்டு தான் படிக்கனும்.