ஒரு வருடம் கழித்து அறிவாலயம் வந்தார் கலைஞர் கருணாநிதி
ஒரு வருடம் கழித்து அறிவாலயம் வந்தார் கலைஞர் கருணாநிதி
இளம் வயதில் இருந்தே அந்தமனிதருக்கு எல்லாமே போராட்டம். விபத்தில் சிக்குவார் அதோ முடிந்தான் கருணாநிதி என்பார்கள் அவரோ எழுந்து வருவார்
அடித்து உதைத்து உயிர் போய்விட்டது என சாக்கடையில் போட்டுவிட்டு செல்வார்கள், கொஞ்சநாளில் வந்து நிற்பார் அவர்
அண்ணா போய்விட்டார், ராமசந்திரன் போய்விட்டான் இனி கட்சி அவ்வளவுதான், கலைஞரும் அவ்வளவுதான் என்பார்கள் ஆனால் அவர் அசால்ட்டாக அரசியலில் நிற்பார்
வந்துவிட்டது சர்காரியா கமிஷன் இனி கலைஞர் உள்ளே என்பார்கள் அவரோ சர்காரியாவிற்கு கைகாட்டி சிரித்துகொண்டிருப்பார், இந்திரா பொல்லாதவர் கலைஞரை அடக்கிவிடுவார் என்பார்கள், இந்திரா பின் கலைஞரோடு கூட்டணி வைப்பார்
ராஜிவ்கொலையோடு திமுக தடை என்றார்கள் அதனையும் தாண்டி முதல்வர் ஆனார் கலைஞர்
எத்தனை சதிகள், எத்தனை மிரட்டல்கள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை முடக்கங்கள் அத்தனையும் தாண்டி அவர் நம்பாத கடவுள் அவரை ஏதோ ஒரு நோக்கத்திற்காக மீட்டுகொண்டே வருகின்றார்.
கலைஞர் இனி அவ்வளவுதான், இம்முறை எழமாட்டார் என எக்காளமிட்டார்கள், தன் இயலாமையிலும் இயலும் என காட்டி அறிவாலயம் வந்துவிட்டார் கலைஞர்
இனி ஆட்சியினை மாற்றி கொடுக்காமல் போகமாட்டார் கலைஞர்
என்ன சொல்லுங்கள், அந்த மனிதனை கண்டுவிட்டால் உள்ளம் ஒருவித சிலிர்ப்பில் மகிழத்தான் செய்கின்றது,
கண்ணோரம் நீர் கோர்ப்பதையும் தடுக்க முடியவில்லை
செம மனுஷன்யா…