ஒரு வாரமாக அதிமுக எம் எல் ஏக்கள் தொகுதிபக்கம் செல்லவில்லை : செய்தி

ஒரு வாரமாக அதிமுக எம் எல் ஏக்கள் தொகுதிபக்கம் செல்லவில்லை : செய்தி

அவர்கள் என்று தொகுதிபக்கம் சென்றார்கள்? அதுவும் கடந்த 2 மாதமாக சுத்தமாக இல்லை, எல்லாம் போயஸ்கார்டன் கட்சி அலுவலகம் என அலைந்துகொண்டிருக்கின்றனர்

ஒரு இரவில் தொகுதிக்கு போய் சின்னம்மா பேனர் வைத்திவிட்டு விடியும்பொழுது சென்னையிலிருந்த எம் எல் ஏக்களும் உண்டு

என்னவோ அவர்கள் தொகுதி மக்களுக்ளுக்காக உழைத்து கொண்டிருப்பது போலவும், இப்பொழுது 1 வாரம் லீவ் விட்டிருப்பது போலவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன‌

பல நாடாளுமன்ற தொகுதிகளில் சின்னம்மா போஸ்டரில் குனிந்து நிற்கும் நபர‌ பார்த்த பின்புதான் தங்கள் தொகுதி எம்.பி என்றும், அப்படி ஒரு நபர் தங்களிடம் முன்பு வோட்டு கேட்டு வந்தார் என்றும் மக்கள் நினைவு கூர்கின்றனர்

சில எம்பிக்கள் , இன்னும் உயிரோடுதான் இருக்கின்றார்கள் என்பதே மக்களுக்கு சின்னம்மா போஸ்டர் மூலமாகத்தான் தெரிந்திருக்கின்றது.