ஒரு விஷயத்தில் சீனா அசத்தி இருக்கின்றது

Image may contain: fireworks, night and outdoor

சில செய்திகள் உலகின் பிராதன செய்திகளாகின்றன , முதல் விஷயம் சவுதியிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வரலாற்றில் முதல் முறையாக வாட் வரி விதிக்கபடுகின்றது, வருமான வரி இன்னும் விதிக்கபடவில்லை

இதுகாலம் அரேபிய நாடுகள் யார் சென்றாலும் அள்ளிகொண்டுவரும் நிலையில் இருந்தன, சுருக்கமாக சொன்னால் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மலேயா சிங்கப்பூர் ஹாங்காங் போல திறந்த நாடாக இருந்தது

இங்கிருந்து சென்ற 5ம் வகுப்பு தாண்டாதவன் எல்லாம் எப்படியோ அள்ளி தொழிலதிபர் என வலம் வந்துகொண்டிருந்தான்

எண்ணெய் வளம் தவிர இதர வளம் இல்லா அந்நாடுகள் விழித்துகொண்டன, தங்கள் பணம் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை கண்டு கடும் கட்டுபாடுகளை விதிக்க தொடங்கிவிட்டன, இது வெறும் டிரைலர்தான் இனி இன்னும் கடுமையாக இருக்கும் என்கின்றன அங்கிருந்து வரும் செய்திகள்

சவுதி என்றல்ல, குவைத் பஹ்ரைன் போன்றவை எல்லாம் அடுத்த ஆண்டுமுதல் வரிவிதிக்க தீவிர ஆலோசனையில் இருக்கின்றன‌

உண்மையில் அவர்கள் வருமானவரி விதிக்கவேண்டும், ஆனால் அப்படி விதித்தால் சர்வதேச விதிப்படி வரிகட்டும் ஒருவன் அந்நாட்டின் குடியுரிமைக்கு தகுதியுள்ளவன் போன்ற சர்ச்சைகள் வருமென்பதால் அதனை தவிர்த்துவிட்டு வேறு எந்த வழியில் எல்லாம் பறிக்கமுடியுமோ அப்படி பறிப்பார்கள்

நிலமை இன்னும் எப்படி ஆகின்றது என போக போகத்தான் தெரியும், உழைத்து பணக்காரன் ஆன நாடுகள் அல்ல அவை. ஒரே இரவில் பணக்காரன் ஆன நாடுகள் அல்லவா? அந்நிலையினை தக்கவைக்க ஒரே இரவில் எந்த சட்டமும் இடுவார்கள்

இங்கே இப்படி என்றால் ஈரானில் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்றது, கோமேனி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இம்மாதிரி அடிக்கடி நடக்கும் அதாவது சில நாடுகளால் நடத்தி வைக்கபடும்

இப்பொழுதும் அதே கொந்தளிப்பு நடக்கின்றது, விலைவாசி உயர்வு அது இது என மக்கள் முணுமுணுத்தனர் விஷயம் பெரிதாக வெடிக்கின்றது

பொருளாதார தடைக்கு மத்தியிலும் தாக்குபிடித்தது, ஐ எஸ் இயக்கத்தை ஒடுக்கியது, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தியது என ஈரானின் கைகள் ஓங்கிய நிலையில் எங்காவது எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்ததுதான் இப்பொழுது இப்படி வந்திருக்கின்றது

ஈரான் சந்திக்கும் அதே சிக்கலை சீனாவும் சந்திக்கின்றது ஹாங்காங்வாசிகள் சீனாவின் கட்டுபாடுகளை எதிர்த்து கொந்தளிக்கின்றனர்

1997ல் பிரிட்டன் வெளியேறும்பொழுது ஹாங்காங் சுயாட்சிபகுதியாக நீடிக்கும் என சொன்னது சீனா, இப்பொழுது அதனை படிபடியாக மீறுவது ஹாங்காங் மக்களுக்கு எரிச்சலை தருகின்றது, அங்கும் சிக்கல்

இந்த புத்தாண்டு இப்படி தொடங்க, ஒரு விஷயத்தில் சீனா அசத்தி இருக்கின்றது

அதாவது பட்டாசை கண்டறிந்தவர்கள் சீனர்கள், இன்றும் அவர்கள் பட்டாசு வகையே தனி. ஆனால் சுற்றுபுற சீர்கேடு அதிகம் வருகிறது என்பதால் இப்பொழுது வேறு மாதிரி பட்டாசு கொளுத்தியாயிற்று

நள்ளிரவில் லேசர் நுட்பத்தில் வான வேடிக்கை காட்டி அசத்திவிட்டது சீனா, இனி அதுதான் உலகில் வருங்கால வான வேடிக்கை, சுற்று சூழலுக்கு பாதுகாப்பான விஷயம் என உலக நாடுகளும் வரவேற்கின்றன‌

அவ்வகையில் புத்தாண்டிலே உலகை அசத்தி வழியும் காட்டிவிட்டது சீனா, இனி சிவகாசி ஆலைகள் எல்லாம் லேசர் நுட்ப ஆலைகளாக வருங்காலத்தில் மாறினாலும் மாறலாம்