ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள்
ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள்
அதாவது இலங்கை மலையக மக்களின் தலைவராக இருந்தவரின் பெயரினை இலங்கை அரசு அகற்றிவிட்டதாம், உடனே இங்கு கொந்தளிக்கின்றார்கள், இது அநீதியாம்
அந்த அபலைகளை என்று இவர்கள் நோக்கினார்கள்?
சாதியால் ஒடுக்கபட்ட அவர்கள் யாழ்பாண மேலாதிக்கத்திடம் வாங்கிய அடி கொஞ்சமல்ல, சிங்கள அடக்குமுறையில் சந்தித்த கொடுமையும் கொஞ்சமல்ல
அந்த மக்களை மூன்றாம்தர மக்களாகவே இரு சாராரும் நடத்தினர், அவர்களில் பலரை திருப்பி அனுப்பியபொழுதும் இங்கு சத்தமில்லை
தேயிலை கூலியினை கூட்டி கொடுங்கள் என அம்மக்கள் போராடும்பொழுதும் இங்கு ஒரு குரல் ஆதரவாக எழும்பவில்லை
இங்கு எழும்பிய குரல் எல்லாம் ஈழம், ஈழவிடுதலை என்றே இருக்குமே ஒழிய மலையகம் எனும் ஒடுக்கபட்ட மக்களை யாரும் நினைத்து பார்க்கவில்லை
புலிகளின் தமிழீழ வரைபடத்தில் இந்த மலையகம் வராது, எப்படியும் போங்கள், நீங்கள் தமிழரே அல்ல என புலிகள் சொன்ன விஷயம் அது
அந்த புலிகளுக்குத்தான் இங்கு தமிழர்கள், தமிழரை வாழ வைக்க வந்தவர்கள் என்ற பிம்பம் இருந்தது
மலையக தமிழரை மனிதர்களாக நினைத்து அரவணைத்த தலைவன் பத்மநபா ஒருவனே, அவனும் கொல்ல்பட அதுவும் காரணம்
அப்படி எல்லா வகையிலும் கைவிடபட்ட இனம் அது , அவர்களை மதித்து சென்ற உலக தலைவர்கள் யார் தெரியுமா? இரண்டே பேர்தான்
விடுதலை வீரன் புரட்சியாளன் சேகுவேரா, ஆம் அவன் அந்த அபலைகளை தேடி சென்றான், அவன் நட்டுவைத்த மரம் அங்கு இன்னும் உண்டு
அவனுக்குபின் அங்கு சென்ற ஒரே அடுத்தநாட்டு தலைவர் மோடி, அம்மக்களுக்கு இந்தியா கட்டிகொடுத்த மருத்துவமனையினை திறக்க சென்றார்
அப்படி கைவிடபட்ட தமிழர்கள் அவர்கள்
ஏன் அவர்கள் குரல் கேட்காது?, அவர்கள் வக்கற்றவர்கள் வாழ வழியற்றவர்கள் அவர்களை பற்றி பேசினால் லண்டனில் இருந்தும் கனடாவில் இருந்தும் காசு வராது
சினிமா எடுத்தாலும் மலேசிய தோட்ட தொழில் பற்றி எடுத்து சம்பாதிப்பார்களே தவிர இவர்கள் துயரம் எல்லாம் யாருக்கும் தெரியாது
இன்று ஏதோ கண்டுவிட்டதை போல கத்துகின்றார்களாம், மலையக தமிழர் தலைவர் பெயரை காக்க வேண்டுமாம்
இங்கே கத்தியது எல்லாம் பிரபாகரனுக்காக, ஆனால் இப்போது கேட்பது மலையக மக்களுக்காகவாம்
இலங்கை எதிர்கட்சி தலைவர் ஒரு தமிழர், அவரே இந்த மலையக மக்களின் உரிமை குறித்து பேசமுடியாது, பேசினால் யாழ்பாணத்தில் வோட்டு விழாது, அங்குள்ள யதார்த்தம் அப்படி
தமிழக அல்ட்ராசிட்டி அரசியல் இப்படி போகின்றது
அவர்களுக்கு செய்வதாக இருந்தால், கூலி உயர்வு கேட்டு கிடைக்காமல் நொந்து வெந்து செத்துகொண்டிருக்கும் அம்மக்களுக்கு உரிய கூலி கிடைக்க போராடலாம்
அவர்களுக்கு கல்வியில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க போராடலாம் (விடுவானா யாழ்பாணத்தான்?)
அதனை விட்டுவிட்டு சும்மா சிங்கள அரசின் கொடுமை என்றெல்லாம் பேசிகொண்டிருப்பது நிச்சயம் உளறல் அரசியல்
அவர்கள் அவர்களின் சூப்பர் ஹீரோ ஜெயவர்த்தனேவினை கூட மறந்துவிட்ட காலத்தில் மலையக தமிழர் தலைவர் பெயரை ஏன் நினைவில் வைப்பார்கள்?
இதில் திமுக வேறு குதிக்கின்றது
அங்கே மலையக தமிழர் பெயர் சர்ச்சையினை விடுங்கள், இங்கு எல்லா அடையாளங்களையும் அழித்து அண்ணா, கலைஞர் இன்னபிற அடையாளங்களை எல்லாம் புகுத்தினீர்களே அதனை நீக்க நீங்கள் தயாரா?
அதனை செய்துவிட்டு சிங்களன் பக்கம் வாருங்கள்