ஒரே ஒரு குஷ்பு

குஷ்புவின் பிள்ளைகள் அவரை போல் இல்லை என சிலர் சொல்லி சந்தோஷபடுகின்றார்களாம்

வரலாற்றில் சிலர்தான் பெரும் அடையாளமிடுவார்கள், அவர்களின் வாரிசுகள் அவர்களை போல வருவதே இல்லை, சாலமோன், ராஜேந்திரசோழன் போன்ற மிக சிலர் விதிவிலக்கு

அதிலும் சாலமோன் மகன் அவரை போலவா ஞானத்தோடு இருந்தான்? இல்லை

கிளியோபாட்ராவின் வாரிசுகளில் ஒன்றாவது அவளை போல் இருந்ததா?

கண்ணதாசனின் பிள்ளைகள் அவரை போலவா எழுதினார்கள்?

இல்லை, காரணம் தனித்த அடையாளத்தோடு அவர்கள் வரலாற்றில் நிற்க வேண்டும் என்ற விதி அவர்களுக்கு இருந்திருக்கின்றது

அட அவ்வளவு ஏன்? கலைஞரின் பிள்ளைகள் அவரின் ஆற்றலோடும் அறிவோடுமா பிறந்திருக்கின்றன? இல்லை

ஒரே சாலமோன், ஒரே கிளியோபாட்ரா ஒரே ஷேக்ஸ்பியர், ஒரே கலைஞர், ஒரே கம்பன், ஒரே கண்ணதாசன்

அவ்வகையில் ஒரே ஒரு குஷ்பு