ஒரே தாஜ்மஹால்..ஒரே நிலா..ஒரே குஷ்பூ
நண்பர் Vengadesh Mothilal இதற்காக அவர்களை கண்டித்து உங்கள் உடைவாளை உருவிக்கொண்டு சீற வேண்டாம், தீ குளிக்கவும் வேண்டாம்
குஷ்பூவிற்கு ஆயிரம் எதிரிகள் உண்டு அதனின்று அவரை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என உணர்ந்தால் போதும்.



Kushboo Guardians added 3 new photos. பதிவு….
டிவி பஞ்சாயத்து தேவையில்லை, நடிகைகள் கலையினை மட்டும் செய்ய வேண்டும் , நடிகை ஸ்ரிப்பியா, வெட்கக்கேடான நிகழ்ச்சி; குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை ரஞ்சனி
இப்படியாக சில நடிகைகள் கிளம்பியிருக்கின்றார்கள், ஏன் என்றால் நடிகை கலைச்சேவை மட்டும் செய்ய வேண்டுமாம், டிவி நிகழ்ச்சிக்கு செல்ல கூடாதாம்
ஏன் செல்ல கூடாதாம்?, தீர்ப்பு சொல்லும் தகுதி நடிகைக்கு இல்லையாம்
இது ஒரு தொலைகாட்சி நிறுவணத்தால் நடத்தபடும் நிகழ்ச்சி, முழுக்க முழுக்க அவர்களே பொறுப்பு, குஷ்பு அதனை நடத்துபவர் மட்டுமே. அன்று சர்ச்சையானது குஷ்பூ ஒருவரை அமர வைத்தார், அவரின் இயல்பான சுபாவம் அது, இதில் என்ன குற்றம்?
விஜய் டிவியில் நீயா நானா என ஒரு நிகழ்ச்சி வருகின்றது, அதனை பற்றி இந்த நடிகைகள் சொன்னது என்ன? ஒன்றுமில்லை
லட்சுமி நடத்தினார், லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தினார் அதனை பற்றி எல்லாம் ஏன் கோபம் வரவில்லை
விளம்பரங்களில் எத்தனை நடிகைகள் நடிக்கின்றனர், அதுவும் அமிர்தா போன்ற ஏமாற்று விளம்பரங்களில் நடித்த நடிகைகளை பற்றி சொன்னார்களா?
நடிகை நடிப்பினை மட்டும் பார்க்க வேண்டுமா?
இதனை அப்பல்லோ வாசலில் சொல்லமுடியுமா? ஏன் நடிகை விந்தியா, சி.ஆர் சரஸ்வதி, பாத்திமா பாபு போன்றவர்களிடம் சொன்னால் என்ன?
நடிகனும் நடிகையும் நடிப்பினை மட்டும் பார்க்க வேண்டும் என எம்ஜிஆர் காலத்தில் ஏன் சொல்லவில்லை, இந்த அப்பல்லோ காலத்திலாவது சொல்லலாம் அல்லவா?
நடிகை விளம்பரத்திற்கு வரலாம், அரசியலுக்கு வரலாம், ஆளலாம் பல கனவுகளை காணலாம். ஆனால் டிவி நிகழ்ச்சிக்கு வந்தால் அது கண்டிக்கதக்கதா?
இதே சிரிபிரியா சன்டிவியில் நிகழ்ச்சிகள் நடத்தவில்லையா?, நடிக்க வில்லையா?. அதனை குஷ்பூ செய்ய கூடாதா?
இந்த ஸிரிபிரியா, ரஞ்சனி போன்றோரை வன்மையாக கண்டிக்கின்றோம்
இவர்களுக்கு எல்லாம் என்ன? ஒன்றுமில்லை எல்லாம் பொறாமை, இந்த குஷ்பூ மட்டும் தொட்ட இடமெல்லாம் வெற்றி ஆகின்றதே, சினிமா முதல் அரசியல் வரை மிக தைரியமாக எதிர்கொள்கின்றாரே என்ற கடும் எரிச்சல்
நம்மால் முடியாததை அவர் அசால்ட்டாக செய்கின்றாரே எனும் கடும் எரிச்சல், அதனை ஜீரணிக்க முடியாமல் வரும் வார்த்தைகள் இவை.
தைரியம் இருந்தால் நிகழ்ச்சி நடத்திய சன்டிவியினை கண்டியுங்கள், முடியுமா? அவர்களை கண்டித்து ஒரு வார்த்தை சொல்வார்களா?
எங்கள் தலைவி இதனை போல ஆயிரம் சிக்கல்களை கடந்து ஜொலித்துகொண்டிருப்பவர், இந்த எரிச்சல் பேட்டிகள் எல்லாம் அவரை ஒன்றும் செய்யாது.
எங்களை போல கோடான கோடி ரசிகர்களின் ஆதரவு இருக்கும் வரை எங்கள் தலைவியினை அசைக்க முடியாது
இந்த ரஞ்சனியும், ஸிரிபிரியாவும் மற்ற நடிகைகளிடம் சென்று, அது அப்பல்லோவோ அப்பல்லோ வாசலோ அங்கு சென்று நடிகைகளுக்கு நடிப்பினை தவிர ஏதும் தேவையில்லை என சொல்லிவிட்டு இங்கு வரட்டும்
வைஜெயந்தி மாலா, ஜெயப்பிரதா, ரோஜா,விஜயசாந்தி என அவர்களை எல்லாம் பார்த்து சொல்லிவிட்டு வரட்டும்.
நிகழ்ச்சியில் ஒருவனை குஷ்பூ வேகமாக பிடித்து அமர வைத்தாராம், அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டுமாம், ரஞ்சனி சொல்கின்றார்
பாராளுமன்றத்தில் கட்சி தலைவி என்னை அடித்தார் என ஒரு எம்பி கதறினாரே, அதனை பற்றி ரஞ்சனி ஏதும் சொன்னாரா? அதனை எல்லாம் விட்டு விட்டு, குஷ்பூவிடம் மட்டும் சீறுவாராம்.
வீணாக எங்கள் தலைவியினை சீறவேண்டாம், முடிந்தால் இவர்களை எல்லாம் கண்டித்துவிட்டு, சன் டிவியினை கண்டித்துவிட்டு இந்த பக்கம் வரலாம்.
உங்கள் பொறாமையின் அளவு இது,
குஷ்பூவின் பொறுமையும் அதே அளவு
உங்களுக்கு அவர் பதில் தரமாட்டார், அவசியமுமில்லை. நேரமுமில்லை,
ஆனால் நாங்கள் எங்கள் தலைவி தரப்பு நியாயங்களை சொல்லிகொண்டே இருப்போம்.
ஒரே தாஜ்மஹால்..ஒரே நிலா..ஒரே குஷ்பூ