ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் – அதே தயக்கம்
One Rank One Pension (OROP) ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் – அதே தயக்கம்
வெள்ளையர் ஆண்ட காலத்திலே இந்தியாவில் ராணுவம் உண்டு, அது இந்தியர்களை அடக்கி வெள்ளையரை காப்பாற்ற வைக்கபட்டிருந்த அமைப்பு,
பின்னாளில் 1947க்குபி அந்தபடை அப்படியே இருந்தது, இந்தியாவுடன் இணையமறுத்த சின்ன சின்ன சமஸ்தானங்களை இணைப்பதில் அதுதான் உதவியது, இல்லை என்றால் ஐதரபாத் சமஸ்தானம் இணைந்திருக்காது, கோவா சேர்ந்திருக்காது. அப்படியே காஷ்மீரால் பாகிஸ்தானுடன் மோதிகொண்டே ஒரு சராசரி ராணுவமாக இருந்தது இந்தியராணுவம்.
காரணம் நேரு, அவரின் ராணுவ விருப்பு குறைவு, இந்திய ஏழ்மையும் அப்படி, பஞ்ச காலத்தில் உலகெல்லாம் கோதுமைக்கே கையேந்திகொண்டு இருந்தவருக்கு ராணுவம் எல்லாம் முக்கியமில்லை.
சீனாவிடம் அடிபட்டபின்னரே ராணுவத்தின் முக்கியத்துவம் அவருக்கு புரிந்தது, ஆனாலும் அவருக்கு காலமில்லை, சென்றுவிட்டார்.
பின்னர் வந்த இந்திரா காலத்தில்தான் ராணுவம் பலபடுத்தபட்டது. “அமைதியை உருவாக்க பலசாலியால் மட்டும்தான் முடியும்” என்பது அவரின் சித்தாந்தம், பின்னாளைய இந்திய ராணுவ வெற்றிகளுக்கெல்லாம் அவர்தான் கந்தக சுழி போட்டவர். ராணுவம் என்றால் வெறும் ஆயுதங்கள் அல்ல அவற்றை செலுத்தும் வீரர்கள்தான் முக்கியம்.
எப்பொழுதும் மரணத்தை எதிர்பார்க்கும் பணி அது, எந்த பதவியானாலும் சரி, உயிரை ஒரு பொருட்டாக மதிக்காத, தாய்நாட்டை காக்க எப்பொழுதும் விழித்திருக்கவேண்டிய பணி அது.
அவர்கள் என்ன பிரம்சாரிகளா? குடும்பம் இருக்கும் அல்லவா? இவர்கள் நாட்டை காப்பாற்றினால், அவர்களின் குடும்பத்தை காப்பாற்றுவது நாட்டின் கடமை அதாவது அரசின் கடமை.
தன்னந்தனியாக எல்லைகளில் பணியாற்றுவது அவர்களின் கடமை, காவல்துறை போல மக்களோடு மக்களாக பணியாற்றும் வாய்ப்பு கூட இல்லை. தார் பாலைவனமோ, சியாச்சின் பனியோ அல்லது கடல்கரையோ எல்லாவற்றையும் சரிசமமாக பாவிப்பவர்கள்.
பல சலுகைகள் இந்திரா காலத்திலே கொடுக்கபட்டன, பின்னாளில் அது அப்படியே வந்துகொண்டிருந்தது, தங்கள் பணிக்காலம் பின் அரசு நம்மை பார்த்துகொள்ளும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
பிரச்சினை உலகமயமாக்கல் அதாவது 1994க்கு பின் வந்தது, எல்லா விலைவாசியும் எகிற தொடங்கியது, வேறுவழியின்றி ராணுவசம்பளம் உயர்த்தபட்டாலும் சிக்கல் வேறுவிதமாக வந்தது.
1970 களில் பணியாற்றியவளுக்கு அந்தகால சம்பள அடிப்படையில் பென்சன் வழங்கபடும், 2000த்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் வாங்கிய சம்பள அடிபடையில் பென்சன் வழங்கபடும்.
ஆனால் இருவருமே வாழ்வது 2015 விலைவாசியில் என்றால் நிச்சயம் சீனியர்கள் பாதிக்கபடுவார்கள் அல்லவா?, அப்படித்தான் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
எல்லா ஓய்வுபெற்றவர்களையும் அவர்கள் பதவி அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஒரே பதவிதானே வகித்தோம்? எங்கள் தந்தையர் அல்லது கணவர்கள் எல்லாம் பின்னால் செத்தவர்களை போலத்தானே செத்தார்கள்? அவர்களுக்கு கூடுதல் எங்களுக்கு குறைவு என்றால் எப்படி? என பத்தாண்டுகளாக போராடிவருகின்றார்கள்.
வாழ வழி இல்லாமல் தங்கள் பராக்கிரமங்களால் பெற்ற அடையாள விருதுகளை எல்லாம் அரசிடம் திரும்ப ஒப்படைத்து எதிர்ப்பினை காட்டினார்கள். மறுபக்கம் கிரிக்கெட் வீரர்களும், சினிமாக்காரர்களும் கோடிகணக்கில் சம்பாதித்துகொண்டிருந்தார்கள்.
அரசியல்வாதிகளின் ஊழல் பணத்தில் இன்னொரு ராணுவத்தையே உருவாக்கலாம் எனும் அளவிற்க்கு பணம்.
இதனை விட ஒரு நாட்டிற்கு என்ன அவமானம் வேண்டி இருக்கின்றது?
காங்கிரஸ் ஆட்சியின் இறுதிகாலத்தில் ஒப்புகொண்டிருந்தது, சட்டம் இயற்றுமுன் ஆட்சிமுடிந்தது அல்லது நிலக்கரி,ஸ்பெக்ட்ரம்,உரம் அல்லது ராசா,மாறன்,அழகிரி என அலைக்கழிக்கபட்டுகொண்டிருந்தது, அதற்குள் மன்மோகன்சிங் நிம்மதி பெருமூச்சுடன் வீட்டிற்கும் வந்து ஈசிசேரில் அமர்ந்தார்.
பாகுபலி பிரபாஸ் போல டிரைலர் காட்டிய பிஜேபி, தனது வாக்குறுதியில் இதனை மகா முக்கியமாக காட்டிற்று. சும்மாவே இரும்புகரம்,யுத்தம், இஸ்ரேல் பாணி தாக்குதல் என சீன் காட்டுபவர்கள், ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக ராணுவத்தை பலபடுத்துவார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. இரும்புகரம் என்றால் ராணுவம் என்பது சொல்லி தெரியவேண்டியது அல்ல.
ஆனால் ஆட்சிக்கு வந்தபின் பாஜவின் பல திட்டங்கள் பரணில் வீசபட்டன. கருப்பு பண மீட்பு , போர் ஆகியவை கூட ராமர்கோவில் போன்றவையும் மூட்டைகட்டபட்டிருகின்றன என்பது வேறுவிஷயம்.
சிக்கன நடவடிக்கை என அரசு பலதிட்டங்களை சொல்லும் காலமிது, ஏன் சிக்கனம்? நாட்டிற்கு அப்படி என்ன ஆயிற்று என யாரும் கேட்ககூடாது. சொல்லிவிட்டு செய்வதற்கு இது ஒன்றும் கீரீஸ் அல்ல, பாரதநாடு.
நாட்டின் வெளிநாட்டு கடன் அப்படி என்கின்றார்கள். வட்டிகட்டவேண்டும், வட்டிமேல் வட்டிகட்ட நமக்கு தெரிந்தவழி சிக்கனம் மட்டுமே. மற்றபடி அரசியல்வாதிகளின் ஊழல், சுரங்க அதிபர்கள், பெரும் தொழிலதிபர்கள் இவர்களிடம் எல்லாம் வரி வசூலிக்கலாம் என்ற திட்டமெல்லாம் இல்லை.
மத்திய அரசு இப்படி என்றால், மாநில அரசின் கடன் ஏராளமாம். இனி அப்பல்லோ கடன் என்று கூட ஒருநிலை வரலாம், அரசு மருத்துவமனைகள் இருக்க தனியாருக்கு அவ்வளவு பெரிய பில் ஏன் என கேட்க கூடாது
கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம், அவர்களை விட முக்கியம் ஆசிரியர்கள். எப்படி? ஆசிரியர் ஒழுங்காக பாடம் நடத்தவந்தவர்கள் என்றால் பிரச்சினை இல்லை. வாக்காளர் பட்டியல்,தேர்தல் பணிகள் எல்லாம் கவனிப்பது யார்? அவர்கள்தானே?
வாக்காளர் தெய்வம் என்றால்? ஆசிரியர்கள் தெய்வத்தின் தெய்வம். பின் என்ன அள்ளி இறைக்கபட்ட சலுகைகளும் சம்பளங்களும் நீங்கள் அறியாதவை அல்லை. தமிழகமெங்கும் நிறைந்திருக்கும் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரிகள் அதனை கோடிட்டு காட்டும்.
கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம், அவர்களை விட முக்கியம் ஆசிரியர்கள். எப்படி? ஆசிரியர் ஒழுங்காக பாடம் நடத்தவந்தவர்கள் என்றால் பிரச்சினை இல்லை. வாக்காளர் பட்டியல்,தேர்தல் பணிகள் எல்லாம் கவனிப்பது யார்? அவர்கள்தானே?
வாக்காளர் தெய்வம் என்றால்? ஆசிரியர்கள் தெய்வத்தின் தெய்வம். பின் என்ன அள்ளி இறைக்கபட்ட சலுகைகளும் சம்பளங்களும் நீங்கள் அறியாதவை அல்லை. தமிழகமெங்கும் நிறைந்திருக்கும் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரிகள் அதனை கோடிட்டு காட்டும்.
இவ்வளவிற்கும் வருங்காலத்தில் தமிழக அரசின் ஓய்வூதியம் கிடையாதாம், நிறுத்தபட்டாயிற்று. எவ்வளவு பெரிய அநீதி ஒரு எதிர்ப்புகுரல் கேட்டிருக்கும்?
காரணம் வேலையில்லா பற்றாக்குறை. இருக்கும் வேலையை பாதுகாப்பது அல்லது வருங்கால வேலைக்கு பிரச்சினை வராமல் சுதாரிப்பது.
இப்படியாக வோட்டை குறிவைத்தே ஆட்சி நடத்தி இலவசங்களை அள்ளி எறிந்ததன் விளைவு ? கடன். தமிழக அரசு டாஸ்மாக் இல்லாமல் ஆட்சிநடத்துவது திவாலுக்கு சமம், அவ்வளவு நிதிசிக்கல்
அதனால்தான் சகல கட்சிகளும் தீவிர மதுவிலக்கில் குதியாய் குதிக்கின்றன தவிர, மக்கள்நலன் அல்ல. இது மாநில அரசியல் விட்டுவிடலாம்.
மத்திய அரசு முதலில் சமையல் எரிவாயுவில் குறிவைத்தார்கள், மானியம் இன்று வங்கிக்கு நாளை அவர்களுக்கு அதாவது முடித்துவிடுவார்கள், விவசாய உரம் விலை சத்தமில்லாமல் மானியம் கட்டுபடுத்தவிட்டது, இன்னும் ஏராள மானியங்கள் நிறுத்தபட்டநிலை.
பென்சன் என்பதையே சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் நிறுத்திவிடலாம் என்பது அரசுகளின் கணக்கு, செய்தும் விட்டார்கள்.
கீரீஸ் நாட்டின்மீது இப்படித்தான் அழுத்தம் கொடுத்து பார்த்தார்கள். அரசு மக்களிடம் கருத்துகேட்டது. மக்களின் உரிமைகளை பறித்துவிட்டு, அரசு மக்களை காக்கும் முதியவர்களை காக்கும் திட்டத்தினை முடக்குவது பொருளாதாரா சீர்திருத்தமா? என பொங்கிவிட்டார்கள், கிரீஸ் அரசு மக்கள் பக்கமே.
ஆனால் இந்தியாவில் யாரையும் கேட்கமாட்டார்கள், அவர்களாக செய்வார்கள். அந்த சட்டம் அமலாக்கும் பொழுது ஏதாவது ஒரு பிரச்சினையை பூதாகரமாக்கி மக்களின் கவனத்தை திருப்பும் தந்திரம் படைத்தவர்கள்.
சிக்கனத்தின் உச்சமாக இந்த ராணுவத்தினரின் கோரிக்கையை ஏற்கதயங்குகின்றது அரசு. ஆனால் நாட்டின் மிக முக்கியமான மரியாதை செலுத்தவேண்டியவர்கள் அவர்கள்தானே தவிர கிரிக்கெட்”வீரர்கள்”, அரசியல் “தளபதிகள்” எல்லாம் அல்ல.
ராணுவத்தின் பாதுகாப்பில்தான் நாமெல்லாம் நிம்மதியாக வாழமுடிகின்றது, ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் ஒரு அமைதியான நாட்டின் மக்களாக சுதந்திரமாக அரசை விமர்சிக்கமுடிகின்றது,
கிரிக்கெட்,சினிமா என கொண்டாட முடிகின்றது. அரசும் அதன் அமைச்சர்களின் ஊழலும், கட் அவுட்டும், வாழ்க ஒழிக கோஷமும், இன மான முழக்கங்களும் அதனால்தான் சாத்தியம்.
தனது சீனியர்களை மதிக்காத அரசு, நாளைக்கு தன்னையும் இப்படித்தான் நடத்தும் என ஒவ்வொரு ராணுவவீரனும் நினைக்க ஆரம்பித்தால் ராணுவம் என்ன ஆகும்?
ஒன்றும் ஆகாது. நிலங்களை பறித்து தொழிலதிபருக்கு கொடுப்போம் என அரசு களமிறங்கியிருக்கின்றது அல்லவா? அந்த நிலம்பறிப்பு வேலையை மற்ற நாடுகள் ஆத்மசுத்தியுடன் செய்யும், ஆனால் யாரிடமும் கொடுக்காது.
சிக்கனம் என்பது அரசுக்கு தேவைதான். இந்திய ராணுவத்தின் எதிர்காலம் பற்றி கனவுகண்ட பட்டேலுக்கு 3000 கோடியில் சிலை, ராணுவத்தின் சகல் வியூகங்களையும் உலகிற்கு சோன்ன பகவான் கிருஷ்ணனுக்கு பல்லாயிரம் கோடியில் ஆலயம், இந்தியா எங்கும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு நிதி என அள்ளி எறியும் சிக்கன நடவடிக்கைகளை எங்கு சேர்ப்பது?
நாட்டை காத்த ராணுவ வீரனை பட்டினி போட்டுவிட்டு, அம்பானிக்கும் அதானிக்கும் சலுகைகளை அளித்தால் இந்தியா பாதுகாப்போடு இருக்குமா?
அப்படி என்ன நிதிபற்றாகுறை? கருப்புபண மீட்பு என்பதாவது அத்வாணியின் மனகுமுறலை போல வெளியில் சொல்லாமல் விட்டுவிடலாம். எத்தனாயிரம் தொழிலதிபர் வாழும் நாடு. கல்லூரி பேராசியர்கள் வாங்காத சம்பளமா? அவர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து, தேர்வுதாள் திருத்தத்திற்கு தனியாக வேறு கட்டனம் கொடுக்கின்றார்கள் அல்லவா? அதனை நிறுத்த கூடாதா?
பிஹெச்டி பட்டதாரிகள் பீடிகட்டுபோல் சரளமாக காணப்படும் காலமிது, அந்த ஒருவர் சம்பளத்தில் எத்தானாயிரம் பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கலாம்?
இப்படி அரசு துறைகளில் நுழைந்து பார்த்தால் வீணாக கொட்டபடும் பணங்கள் எவ்வளவு?
இதில் எல்லாம் கைவைக்க அரசுக்கு தெரியாதா? என்றால் தெரியும். ஆனால் கைவைத்தால் ஆட்சி போகும் அளவிற்கு கட்சிபெயர் கெட்டுவிடும் என்பதும் தெரியும்.
அதனால் ஏழைமக்கள், அடிதட்டு மக்களின் நிலைகளில் மட்டும் இவர்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்வார்கள். அந்த சீர்திருத்தம் ராணுவவீரர்களையும் குறிவைத்திருப்பது மாபெரும் ஆபத்து.
காரணம் எந்ததுறை செயலிழந்தாலும் இந்தியா இயங்கும், ராணுவம் மறுத்தால் நாடு என்ன ஆகும்?
அப்படி செயல்பட மறுத்த காரணம்தான், சோவியத் யூனியன் துண்டாகி போனது. கோர்பசேவின் உச்சகட்ட சிக்கனம்தான், அந்த வல்லரசின் ராணுவ மனநிலையை உடைத்தெறிந்தது, பின் அரசுக்கு எதிரான கலவரங்களை கட்டுபடுத்த அது மறுத்துவிட்டது. ராணுவமில்லா சோவியத் மாகாணங்கள் பிய்த்துகொண்டு ஓடிவிட்டன.
ஆனால் உலக நாடுகளிலே ராணுவத்திலிருந்து ஆட்சிக்கு வந்தவர்களை பாருங்கள், நாட்டினை தூக்கி நிறுத்தியிருப்பார்கள்.
கென்னடி, மாவோ,ஸ்டாலின் என பட்டியல் நீளமானது, இதில் பாகிஸ்தானை சேர்த்துகொள்ளாதீர்கள். ராணுவ ஆட்சிக்கும் முன்னாள் ராணுவத்தினரின் மக்களாட்சிக்கும் வித்தியாசம் தெரியா நாடு அது.
இன்றும் இஸ்ரேலில் எல்லோருக்கும் கட்டாய ராணுவபயிற்சி உண்டு, ஆனாலும் ராணுவத்திலோ அல்லது உளவுதுறையிலோ உச்சம் சாதித்தவர்கள் மட்டுமே பிரதமராக தேர்ந்தெடுக்கபடுவார்கள். அந்த போராட்ட உணர்வில் நாட்டிற்காய் போராடுவார்கள் என்பது அவர்கள் கொள்கை
அவர்களுக்கு தெரிந்தது அப்படி, நாட்டை காப்பாற்றவேண்டும்
தமிழ்நாட்டில் நடிப்பு அல்லது கதைவசனம் துறையிலிருந்து வருவார்கள், வந்து அவர்களுக்கு எது தெரியுமோ …., அதனை செய்வார்கள் ஒன்று வசனம் அல்லது நடிப்பு
வங்கபோரின் வெற்றியில் இந்தியாவால் கொண்டாடபட்டவர் ஜெனரல் மானெக்ஷா, அவரின் மதிப்பு அப்படி. பாகுபலி ஹீரோ போல மக்கள் மனதில் நிறைந்திருந்தார். அரசியலுக்கு அழைத்தபோது சொன்னார் “நான் செய்யவேண்டிய வேலையையை இந்திராவே செய்கிறார், பின் நான் எதற்கு?”
இந்த நாட்டின் மிகபெரும் நம்பிக்கையும், ஆதாரமும் ராணுவம் மட்டுமே, நாமெல்லாம் தமிழர்கள், சொன்னால் புரியாது என்றால் “இரத்த திலகம்” முதல் “துப்பாக்கி” வரை தமிழகம் சினிமாவாக தந்திருகின்றது, பார்த்தாவது தெரிந்துகொள்ளலாம், விஜய்காந்த் அவர்களின் சில படங்கள் இன்னும் அபாரம்.
ரோஜா படத்தில் ஒரு ராணுவதளபதியாக நாசர் புலம்புவார் அல்லவா? அப்படித்தான் முன்னாள் ராணுவத்தினர் எல்லாம் உண்மையில் புலம்பிகொண்டிருக்கின்றனர்.
சிக்கணம் தேவைதான், உடலுக்கு மேல் கோர்ட் சூட் போட்டுகொண்டு குடலுக்கு உணவில்லாமல் செய்வதன் பெயர் சிக்கனமா? அதுதான் இங்கு நடக்கின்றது.
இதோ ஒரு முதிய இந்திய ராணுவ வீரர் தற்கொலை செய்யும் அளவிற்கு நிலமை மோசமாயிற்று, ராகுல் காந்தி சென்று என்னமோ கத்திகொண்டிருக்கின்றார்
அரசியல்தான், ஆனால் எதிர்கட்சி தன் கடமையினை ஆற்றுகின்றது
ஒரு விஷயம் நிச்சயம் செய்யலாம். பெரும்பாலான நாடுகளில் கட்டாய ராணுவபயிற்சி உண்டு. 18 வயது நிரம்பிவிட்டால் 3 ஆண்டு கட்டாயம் துப்பாக்கி தூக்கி தீரவேண்டும், வாய்பு அமைந்தால் யுத்தத்திலும் பங்குபெறவேண்டும்
ஏன்?
அப்பொழுதுதான் ராணுவத்தின் வலி தெரியும், உச்சமாக நாட்டிற்கு ஆபத்தென்றால் எல்லோரும் களத்திற்கு ஓடலாம்
இஸ்ரேலும், அமெரிக்காவும் இன்றளவும் உலகினை கலக்கிகொண்டிருப்பது இப்படியே
காரணம் அப்பொழுதுதான் நாட்டுபற்றும், அக்கறையும் மேம்பட்டு வரும், சும்மா விட்டதன் விளைவு கிரிக்கெட், சினிமா என சென்று
தனுஷ், அஜித் போன்றவர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலூற்றி நாட்டை கெடுத்து நாசமாக்கிவிட்டது
அம்மாதிரி கட்டாய ராணுவபயிற்சி இந்தியாவிற்கும் தேவை
(அப்படி நடந்தால் அங்கிள் சைமன் இங்கு பயிற்சி பெற்றுவிட்டு அங்கு சென்று ஈழம் அமைப்பாரோ)
மத்திய அரசு இந்த ராணுவத்தாரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டே ஆகவேண்டும்
ரஷ்யாவிடம் எத்தனை ஆயிரம் கோடிக்கு எஸ்400 ஏவுகனை வாங்குகின்றார்கள், இவ்வளவிற்கும் அது சோதிக்கபட்டது அல்ல, சிரியாவில் நிறுவபட்டதும் இஸ்ரேலிய நுட்பத்திடம் தோற்றிருக்கின்றது
அதாவது அந்த வான்பாதுகாப்பு முறை இருந்தும் இஸ்ரேலிய விமானங்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிலர் டாட்டா காட்டி செல்வது போல அழகாக ஊடுருவி செல்கின்றன
அப்படி பல இடங்களில் எத்தனையோ ஆயிரம் கோடி கொட்டும் அரசு, சிவாஜிக்கு மண்டபமும், பட்டேலுக்கு பெரும் கோடிகளில் சிலையும் கட்டும் அரசு
இந்த ராணுவத்தினரை வஞ்சிப்பது நிச்சயம் பொறுக்கமுடியாதது
அப்படி மத்திய அரசிடம் பணம் இல்லை என்றால் பொது மக்களிடம் வாய் திறந்து அரசியலை மீறி கேட்கலாம், சீன பாகிஸ்தானிய யுத்தங்களின் போது அப்படி கேட்டார்கள்
இந்த தேசம் கொட்டி கொடுத்தது, ஒரு இந்தியனும் இல்லை என சொல்லவில்லை
இந்தியர்களின் நாட்டுபற்று அப்படி,
கூடவே இப்படி கொடுத்தால் வரி இம்சை இல்லை எனும் தொழிலதிபர்களின் இன்னொரு பார்வையும் உண்டு
எப்படியோ அரசுக்கே பணம் வந்து சேரும், இந்த ராணுவத்திரை பராமரிக்கலாம்
சில மாநில முதல்வர்களையும், சில கிரிக்கெட் வீரர்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பி எல்லாம் உயிர்காக்கும் இந்திய அரசு, உயிரை துச்சமாக மதித்து நாட்டை காக்கும் ராணுவத்தினரின் கோரிகைக்கு தயங்குவது பெரும் விசித்திரமே
தேசத்திற்காக உயிர் விடும் ராணுவத்தாரின் உயிரை விடவா? கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளின் உயிர் மதிப்பு வாய்ந்துவிட்டது?
இந்திய ராணுவத்தினரை தவிக்கவிட்டால் இத்தேசம் பாதுகாப்பாக இருக்க என்ன வாய்ப்பு இருக்கின்றது?
இந்நாட்டின் இன்றைய நிலையில் மிகபெரும் விஷயம் இது
ஆனால் பத்திரிகை செய்தி கமலஹாசன் ஏன் கவுதமியினை பிரிந்தார் என்பதிலே சுற்றி சுற்றி வருகின்றது
நாட்டினை காக்க போவது நிச்சயம் கவுதமி போன்ற சினிமாக்காரர்களோ, கிரிகெட்டர்களோ, தமிழிசை போன்ற அரசியல்வாதிகளோ அல்ல
இந்திய ராணுவம் ஒன்றே இத்தேசத்தை காக்க முடியும், அதில் சிக்கனம் பார்க்காதீர்.
கொசுறு
இலங்கையில் உயிரையும் காக்கவில்லை…! டெல்டாவில் பயிரையும் காக்கவில்லை…: திமுகவினை சாடுகின்றார் தமிழிசை
ரைமிங்கில் அக்கா கலாய்கின்றாராம்….
இப்பொழுது மோடிதானே பிரதமர், அவர் என்ன ம…ரை காப்பாற்றிவிட்டார் அம்மணி??