ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 01
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 01
கலை என்றால் வெறும் ஆடல் பாடல் அல்ல, ஒரு விஷயத்தில் மனம் ஒன்றி அந்த விஷயம் மூலம் உண்மையினை உணர்ந்தால் அந்த உணர்வை லயிக்க வைக்கும் சக்தி இருந்தால் அந்த விஷயமே கலை என்றாகும்
கலை என்பதற்கு ஒன்றாக கலந்துவிடுதல் எனும் பொருளும் உண்டு, அவ்வகையில் முக்தியினை நோக்கி ஈர்க்கும் விஷயங்களை இங்கு கலைஞானம் என அதிகாரமாக கொடுக்கின்றார் ஒளவையார்
முதல் குறள் இதோ
“சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது”
இக்குறள் “சத்தியாம் சந்திர்னை செங்கதிரோன் ஊடுருவில் முத்திக்கு மூலம் அது” என பிரிந்து பொருள் தரும்
அதாவது இடகலை எனும் சந்திரகலை மூச்சும், பிங்கலை எனும் சூரிய கலை மூச்சும் அதாவது நம் உடலில் இடதுநாசி வழியாக ஓடும் மூச்சு சந்திர கலை என்றும், வலது நாசி வழியாக ஓடும் மூச்சு சூரிய கலை என்றும் ஞானியர் மொழியில் அழைக்கபடும்
இதனில் வலபக்கம் மூச்சு சூடானது இடபக்கம் மூச்சு குளிரானது இந்த சமநிலையில்தான் உடல் வெப்பம் கட்டுபடுத்தபடும்
யோக பயிற்சியினால் அந்த இரண்டு மூச்சையும் கட்டுபடுத்தி , யோகத்தால் அவற்றை இணைத்தால் சுழிமுனை நாடி எழும்பும் அந்த நாடி உடலின் சக்கரங்களை துலக்கி உச்ச சக்கரத்தையும் துலக்கும் அப்பொழுது உடலின் நாடியெல்லாம் அடங்கி அது முழுக்க பிரபஞ்ச தொடர்பினை பெறும், அந்த பிரபஞ்ச சக்தி அந்த யோகியினை வழிநடத்தும்
இது முக்திக்கு ஏதுவாகும்
ஒளவையார் இக்குறளில் அந்த யோக தத்துவத்தைத்தான், இடகலை பிங்கலை எனும் இடது மூச்சு (சந்திரகலை அதாவது சக்தி) பிங்கலை எனும் வலபக்க மூச்சு (அதாவது சிவ தத்துவம்) இரண்டையும் சேர்த்து சுழிமுனை நாடியினை எழுப்பி முக்தி அடையலாம் எனும் தத்துவத்தை சொல்கின்றார்