ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 03
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 03
“அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு”
இக்குறள் “அஞ்சாலும் மாயாத அறம் பொருள் இன்பமும் துஞ்சாதவர் துறகுமாறு” என பிரிந்து பொருள் தரும்
அஞ்சாலும் என்பது ஐந்தாலும் என பொருள்படும், அதாவது ஐம்புலன்கள்
இந்த ஐம்புலன்களும் அறம் பொருள் இன்பம் எனும் மூன்று விஷயங்களில் சிக்கி கிடக்கின்றது. ஒரு ஆன்மா அறவாழ்வு, பொருள்வாழ்வு, இன்பவாழ்வு என மூன்றிலும் அல்லது மூன்றில் ஒன்றிலாவது சிக்கி கிடக்கின்றது
இங்கு அறம் என்பது தர்மம் எனினும் அதை செய்ய பொருள் வேண்டும், உழைக்கவேண்டும் வாழ்வியல் சுழலில் சிக்க வேண்டும்
இன்னும் ஆழமாக சொன்னால் பொருளும், இன்பவாழ்வும் அறத்தை சார்ந்து அமைவதுதான் நல்வாழ்வு இல்லையேல் அது நல்வாழ்வு அல்ல
இப்படி நல்வாழ்வு வாழ்ந்தால் அதை தொலைக்க நல்ல பிறப்பும் இன்பமே பிரதானம் என வாழ்ந்தால் அதை தொலைக்க அடுத்தொரு கடின பிறப்பும் எடுத்து பிறவி சுழலில் சிக்க வேண்டும்
பிறப்பற்ற நிலைக்கு முக்தி நிலைக்கு இந்த வினைகளை களைய வேண்டும் அதற்கு அறம் பொருள் இன்பம் எனும் மூன்று நிலைகளையும் கடந்து வீடுபேற்றினை அடைய வேண்டும்
அதைத்தான் இந்த குறளில் சொல்கின்றார் ஒளவையார், “துஞ்சாதோர்” என்பது தெய்வநிலையினை எட்டியோரை குறிப்பது, தேவர்களுக்கு இமை இல்லை என்பது இந்துமத கூற்று அதாவது அவர்கள் துஞ்சுதல் எனும் தூக்கம் கொண்டவர்கள் அல்ல, எப்பொழுதும் விழிப்பானவர்கள் எனபதை குறிப்பால் சொன்னார்கள்
அந்த தெய்வநிலை எனும் முக்தி நிலை எட்ட அறம், பொருள் , இன்பம் எனும் மூன்றையும் துறந்து தவ வாழ்வுஒன்றே வாழவேண்டும் என்பது குறளின் போதனையாகும்