ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 08

“பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு

அர்த்தமில்லா உணர்வை அதாவது உடலே பிரதானம் எனும் உணர்வை அறுத்து உண்மையான பொருளை தேடி தவமிருந்து பிரபஞ்சத்துடன் கலப்பதே வீடு பேற்றுக்கான வழி என்கின்றார் ஒளவையார்.

அழிய கூடிய உடலிலும் அதன் ஆசைகளிலும் மனதை வைத்து ஆசையினை செலுத்தி வாழ்வினை வீணாக்காமல் அழியாத நித்தியமான பிரபஞ்ச சக்தியினில் கரைந்து வீடு பேறு அடைய முயற்சிக்க வேண்டும் என்பது ஒளவை சொல்லும் போதனை