ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 09
“பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு”
பிறப்பற்ற நிலையினை அடைவதே மோட்சவீடு பாக்கியமாகும், சிறந்த ஒப்புமை (பேர் உவமை) இன்றி, அதாவது உலகோடும் உலக இயல்போடும் ஒன்றி இராமல் அந்த இயல்பை அறுத்து தன்னை உருமாற்றி இருத்தல் வேண்டும் என்கின்றார் ஒளவையார்.
மோட்சம் என்பது பிற்ப்பற்ற நிலையே, அந்த நிலையினை அடைய உலக இயல்பை அறுத்து தன் மானிட இயல்பிலிருந்து தன்னை அறுத்து , தன் இயல்பை மாற்றி சிவ சிந்தனையில் இருத்தல் வேண்டும் என்கின்றார் அந்த ஞான மூதாட்டி