ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 05
“ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம்”
இக்குறள் “ஆயும் இரவியும் ஒன்றே அனைத்துயிருக்கும் ஆயுங்காலம் ஒன்றே சிவம்” என பிரிந்து பொருள் தரும்
இந்த உலகின் தாய் போல ஒரே ஒரு சூரியன் இருப்பது போல, எல்லா உயிர்க்குள்ளும் உயிராய் இருப்பது சிவமே, சிவமே எல்லா உயிருக்குள்ளும் இருக்கும் சக்தி, எங்கும் சூரிய ஒளி பரவி நிற்பது போல எல்லா உயிருக்குள்ளும் சிவம் நிற்கின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பாடலின் பொருளாகும்