ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 10

“சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு”

அதாவது “சிந்தை ஆங்காரம் செறிபுலம் அற்றக்கால் முந்தியே ஆகுமாம் வீடு”

அகங்காரமான எண்ணங்களை ஐம்புலன்களிலும் இருந்து விடுவித்தால், ஐம்புலன்கள் வழி உலக மயக்கங்ளில் வீழாமல் அந்த புலன்களின் உணர்ச்சியினை அடக்கினால் வீடுபேறு அடையலாம் என்பது பொருள்

ஐம்புலன்களையும் அடக்கி, புலன்களின் உணர்ச்சியில் இருந்து மனதை வீடு பேறு எனும் முக்தி கிடைக்கும் என்பது குறளின் பொருள்