ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 06
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 06
“ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந்
தேவான தென்றே தெளி”
இக்குறள் “ஓவாதது ஒன்றே பலவாம் உயிர்க்கெல்லம் தேவான தென்றே தெளி” என பிரிந்து பொருள்தரும்
ஓவாதது என்றால் நீங்காதது, எப்பொழுதும் எக்காலமும் நிலைத்திருப்பது என பொருள்
என்றும் நிலைத்து நிற்கும் அந்த சக்தி, இடையறமால் இந்த உலகை இயக்கி வரும் அந்த சிவம் எனும் பெரும் சக்தியே எல்லா உயிர்களுக்கும் தேவன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது குறளின் பொருள்
இடையறாது இயங்குவதும் ஆதியும் அந்தமும் இல்லாததுமான சிவம் எனும் பெரும் சக்தியே எல்லா உயிருக்கும் தேவன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் ஒளவையார்