ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 07

“தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்
செம்மையா லீசன் றிறம்”

அதாவது “தம்மை அறியாதார் தாம் அறிவோம் என்பதுதென் செம்மையால் ஈசன் திறம்”

ஒருவனுக்கு தன்னையே யார் என அறியாத நிலையில் அவனால் சிவனை எப்படி அறிந்து கொள்ள முடியும்? சிவனை அறிந்து கொள்ள ஒருவன் தான் யார் என அறிந்து கொள்ள வேண்டும் அதன் பின்பே சிவம் அவனுக்கு விளங்கும் என்பது பாடலின் பொருள்

சிவனை அறிய வேண்டுமானால் முதலில் ஒருவன் தன்னை யார் என அறிந்து தெரிய வேண்டும், ஆனால் தன்னை அறிதல் என்பது சுலபமல்ல எனினும் இறையருளால் அதை உணரலாம்

இறையருளால் தன்னை உணர்வதே சிவனை உணர்வதன் முதல்படி என்பது குறளின் பொருளாகும்