ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 07
“மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்
காலமாய் நிற்குஞ் சிவம்”
எல்லா உயிருக்கும் சிவமே மூலம் அந்த சிவமே முடிவு , எல்லா உயிருக்கும் ஆயுள் கொடுப்பதும் ஆயுள் வரை காவலாய் இருப்பதும் சிவமேயாகும் என்பது குறளின் பொருள்
எல்லா உயிர்களும் சிவனில் இருந்தே தோன்றுகின்றன, சிவன் அருளிய காலம் வரை அவர் அருளில் வாழ்கின்றன, பின் அந்த பரமாத்மாவிலே கலக்கின்றன என்கின்றார் ஒளவையார்