ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 10
“நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்”
அசைவன அசையாதன என உலகில் இருக்கும் எல்லாமுமே சிவம், அதன் உற்ற இயக்கமாய் நிற்பதும் சிவம் என்பது குறளின் பொருளாகும்
இங்கு அசைய கூடிய ஆடுமாடுகள், பறப்பன,ஊர்வன தொடங்கி கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா வரை , காற்றுவரை எல்லாமும் சிவம்
அப்படியே அசையாத மலையும் கல்லும் நிலமும் சிவம், மரமும் கொடியும் சிவம் என்கின்றார் ஓளவையார்
(நிற்பது நடப்பது என்பதுதான் அசையாதது, அசைவது என்ற பொருளில் சைவம் அசைவம் என்றாயிற்று, சைவ மதம் என்பதே அசையாததை உண்ணும் வழக்கம் கொண்டவர்கள், அசையும் உயிர்களை உண்ணாதவர்கள் எனும் பொருளில்தான் வந்தது
பின் அதனில் இருந்து பல வழிபாட்டு பிரிவுகள் வந்தாலும் மூலத்தை கவனித்தால் பெருவாரியான அசைவ வழக்கம் இந்துக்களிடம் இருக்காது, மூலம் என்பது சைவமே )
அசையும் உயிர்கள், அசையா பொருட்கள் என எல்லாமும் சிவன், அதன் இயக்கமும் உயிருமாக இருப்பதும் சிவன் அதன் ஆதார சக்தியும் சிவம் என்பது குறளின் பொருள்