ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 09
“உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து”
இக்குறள் “உலகத்தில் பட்ட உயிர்க்கெல்லாம் ஈசன் நிலவு போல் நிற்கும் நிறைந்து” என பிரிந்து பொருள் தரும்
அதாவது இந்த உலகெல்லாம் நிறைந்திருக்கும் குளுமையான நிலவொளி போல எல்லா உயிர்க்கும் ஈசன் இனிமையான குளிர்ச்சியினை தருவான் என்பது பொருள்
இங்கு நிலவை குறிப்பதன் நோக்கம் வேறொன்றுமல்ல, சந்திரன் எனும் கிரகத்தை மனதோடு சம்பந்தபடுத்தி சொன்னவர்கள் இந்துக்கள், சந்திரனின் இயக்கத்தை பொறுத்து மனதின் இயக்கம் அமையும்
ஈசன் அருளால் எல்லா உயிர்களின் மனம் குளிரும், ஈசன் நிம்மதியினை அளிப்பான் என்பது குறளின் பொருளாகும்