ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 10

“உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரைமெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு”

இக்குறள் “உள்ளத்தின் உள்ளே உறப்பார்த்து அங்கு ஓண் சுடரை மெள்ளதான் அர்ச்சிகு மாறு” என பிரிந்து பொருள் தரும்

உள்ளத்தின் உள்ளே உறபார்த்து (உற்று பார்த்து ) அங்கு நீண்டு எழும் (ஒண்) சுடரை நிதானமாக (மெள்ள) அர்ச்சிக்க வேண்டும் என்பது பொருள்.யோகதியானத்தில் உள்ளத்தின் உள்ளே உற்று நோக்கி அங்கு எழும் ஜோதி வடிவ சுடரை ஆத்ம தரிசனமாக உணர்ந்து தரிசித்து நிதானமாக வழிபட வேண்டும் என்கின்றார் ஒளவையார்

தியானத்தின் உச்சத்தில் சிவனாகிய ஈசனை ஜோதிவடிவாக தரிசிக்கலாம், அதைத்தான் இங்கே அழுத்தி சொல்கின்றார் ஒளவை.