ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 01
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 01
“எண்ணிலி யூழி தவஞ் செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு”
இக்குறள் “எண்ணிலி ஊழி தவம் செய்திங்கு ஈசனை உண்(ள்)நிலமை பெற்றது உணர்வு” என பிரிந்து பொருள் தரும்
அதாவது சிவம் என்பதை உடனே உணரமுடியாது, எண்ணற்ற முறை எண்ணற்ற பிறவிகளில் தவமிருந்துதான் ஈசனை மனதால் உணரமுடியும் என்பது பொருள்
“தவம் என்பது ஒரு பிறவியில் வருவது அல்ல,சிவனை அடைவதும் உணர்வதும் ஒரே பிறவியில் வாய்த்துவிடுவதும் அல்ல, அது காலம் காலமாக பிறப்புதோறும் தேடிவருவது, அதனால் மனமே இப்பிறப்பில் சிவனை நீ தேடி தவமிருந்தால் அது பல பிற்ப்புகள்ளின் தொடர்ச்சியின் பலன் என உணர்ந்து தவம் செய்து சிவனை உணர்வாயாக” என்கின்றார் ஒளவவையார்
சிவனை தேடி காலம் காலமாக பிறந்த பிறப்பினை இப்பிறவியில் மனதால் உணர்ந்து நிறைந்து சிவனுடன் ஐக்கியமாகி பிறப்பினை முடித்துகொள்ள வேண்டும், எப்பொழுது சிவனை பூரனமாக மனது உணர்கின்றதோ அதுவே முக்திநிலை அதனை அடுத்து பிறப்பில்லை என்பது ஒளவை போதிக்கும் தத்துவமாகும்
இதே குறளின் பொருளை வள்ளுவனும் தன் குறளில் சொல்கின்றான்
“தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கோள் வது”
ஆம், தவம் செய்வது கூட முற்பிறவியில் நல்வினை கொண்ட மக்களாலேயே செய்யவல்லது என்பதே என் வள்ளுவனின் கருத்து.
முற்பிறவியின் பலனாய் இப்பிறவியில் தவமும் அதை தேடும் விருப்பமும் அதனால் சிவனை உணரும் நிலை கிடைக்கும், அதெல்லாம் எல்லோருக்கும் வாய்க்காத பெரும் பாக்கியம் என்பதுதான் பாடலின் ஞானதத்துவம்
எவன் ஒருவன் தன்னை சுற்றி நிகழும் நிகழ்வுகளை ஆராய்ந்து , அதை பற்றி புரிந்து, எதன் மீதும் அதீத விருப்பு வெறுப்பு என எந்த விதமான பற்றும் இன்றி இருந்து…ஒன்றை அறிந்தும்…வாழ்ந்து வந்தால்…முக்தி அடையலாம்.
அது என்ன வென்றால்.
பிறக்கும் பொழுது எதும் கொண்டு வந்ததில்லை…!
பிறந்து மண்மேல் இறக்கும் போது, கொண்டு போவதில்லை…!
இடையில் வந்தது இறைவன் தந்தது…!
என்ற புரிதல் இருந்து அதற்கேற்றபடி நீங்கள் வாழ்ந்து வந்தால், நீங்களும் முக்தி பெற்றீர்கள் என்று அர்த்தம்!