ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 02

“பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்”

இக்குறள் “பல் ஊழி காலம் பயின்றனை அர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம்” என பிரிந்து பொருள் தரும்

நல்லுணர்வு எனும் மெய்ஞானம் பெற்று நலம் அடைவது என்பது ஒரே பிறவியில் வருவது அல்ல, அது பல யுகமான காலங்கள் செய்த தவத்தாலும் அர்ச்சனை எனும் மனதால் செய்யும் பூஜையாலும் வருவது

ஒரே பிறவியில் தவம் கைகூடவில்லை என்றாலோ இறையருள் கிடைக்கவில்லை என்றாலோ கலங்க ஏதுமில்லை, மானிடரின் கடமை ஒவ்வொரு பிறவியிலும் இறைவனை தேடி மனதால் அர்ச்சித்து தவமிருப்பது ஒன்றே, நிச்சயம் ஒரு பிறவியில் அந்த தவம் கைகூடும், இப்பிறவியில் ஞானமும் இறையருளும் வாய்க்கபபெற்றோரெல்லாம் முற்பிறவியில் பெரும் தவம் செய்த தொடர்ச்சியின் பலனாய் இந்த பிறவியில் அந்த பெருநிலையினை அடைந்தார்கள் என்பது குறளின் பொருளாகும்