ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 05

“காயக் கிலேச முணர்ந்த பயனன்றே

ஓயா வுணர்வு பெறல்”

இக்குறள் “காய கிலேசம் உணர்ந்த பயனன்றே ஓயா உணர்வு பெறல்” என பிரிந்து பொருள்தரும்

காயம் என்றால் உடல், கிலேசம் என்றால் தீரா கவலைகள் என பொருள்இந்த உடலானது சதாகாலமும் மாறிகொண்டே இருந்து ஒரு காலம் அழிந்துவிடும் என்ற சிந்தனையின் பயனே இறையுணர்வு பெற்ற நிலை என்பது குறளின் பொருள்

இந்த உடல் அழிந்துவிடும் அது நிலையற்றது, நிலையான பரம்பொருளை உணர்ந்து அடைவதே நிரந்தரமானது எனும் உணர்வு வரும் நிலையே ஞான பெருநிலையாகும்

உடல் அழியகூடியது எனும் சிந்தனை வெறுமனே உடலை மட்டும் குறிப்பதல்ல, உடல் வாழும் உலகம் அந்த லவுகீக வாழ்வு, செல்வம், செல்வாக்கு, அதிகாரம் என எல்லாமே அழியகூடியது என்பதை உணர்வது