ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 09

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 09

“எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம்.”

இவ்வரி “எல்லையில் இன் அமிர்தம் உண்டால் இனிதிருக்கில் தொல்லை முதலொளியேயாம்” என பிரிந்து பொருள் தரும்

இங்கு எல்லை என்பது யோகத்தின் முடிவினை சொல்வது

தொல்லை என்பது இங்கு சிரமம், துன்பத்தை குறிப்பது அல்ல மாறாக “தொல்” எனும் பழமையினை குறிப்பது

இக்குறளின் பொருள் மிக மிக எளிதானது

யோகத்தின் முடிவில் (எல்லையில்) துரிய சக்கரம் துலங்கும் பொழுது அமிர்தம் சுரக்கும் அந்த அமிர்தத்தை உண்ட இனிமையில் ஆதியில் (தொல்லை) இருக்கும் பேரோளியினை காணலாம்

அதாவது யோகத்தின் முடிவில் பேரோளியாக இறைவனனின் அருட்ஜோதியினை காணலாம் எனபது ஒளவை போதிக்கும் தத்துவம்