ஓய்வில்லா உழைப்பு
என்னதான் சர்ச்சை என்றாலும் சில நியாயங்களை சொல்லியாக வேண்டும்
அண்ணாவும் கலைஞரும் அந்நாளைய திமுகவினரும் கட்டை வண்டி ஏறி, கால் தேய தேய கிராமங்கள் எல்லாம் நடந்து கட்சி வளர்த்தனர்
திமுக வேகமாக வளர அவர்களின் ஓய்வில்லா உழைப்பே காரணம்
இன்றுபோல் அன்று ஊடகமோ இல்லை போக்குவரத்து வசதியோ இல்லை, கற்சாலைகளிலும் ஒற்றையடி பாதைகளிலும் அவர்கள் ஓடி ஓடி கட்சி வளர்த்தனர்
அதனால் உறுதியாக சொல்லலாம் கிராமங்களுக்கு செல்வதோ இல்லை அங்கு சென்று கூட்டம் நடத்துவதோ அவர்களுக்கு புதிதல்ல
ஆதியில் பெரியார் செய்தார் அதன்பின் அண்ணா செய்தார், கலைஞர் செய்தார் அதைத்தான் இன்றைய தலமையும் செய்கின்றது
ஆனால் அன்றைய பெயர்கள் எல்லாம் திமுக கூட்டம், விழிப்புணர்வு கூட்டம், உழைப்போர் உரிமை கூட்டம் என நடைபெறும்,
கிராம சபை என்ற பெயரில் நடைபெறாது , ஆனால் இன்றைய கிராம சபை கூட்டங்களை அன்றே வேறுபெயரில் நடத்தினார்கள், கொடி ஏற்றினார்கள் என்பது வரலாறு