பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஓய்வுபெற்ற நீதிபதி தலமையில் தூத்துகுடி சம்பவத்தை விசாரிக்க குழு அமைப்பு : பழனிச்சாமி அறிவிப்பு

ஓய்வுபெற்ற நீதிபதி தலமையில் தூத்துகுடி சம்பவத்தை விசாரிக்க குழு அமைப்பு : பழனிச்சாமி அறிவிப்பு

போகிற போக்கில் இனி ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியினையும் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல..

இனி ஓய்வுபெற்ற நீதிபதிகள் எல்லாம் “எங்களை விடுங்கடா, வயசான காலத்துல போட்டு அலைக்காதீங்கடா, மூட்டு வலி கழுத்து வலிடா , நடக்க முடியலடா..” என போராடும் காலம் வரலாம்

அதனால் இப்பொழுதே அவர்கள் சங்கம் எல்லாம் அமைத்து எதிர்ப்பு தெரிவிப்பது நல்ல முன் எச்சரிக்கை


இந்த அரசு சுத்தமான அலட்சியமுள்ள அரசு, கொஞ்சமும் அக்கறை இல்லா அரசு என்பது தூத்துகுடியில் நடந்திருக்கும் இரண்டாம்முறை துப்பாக்கி சூடு உறுதிபடுத்தியிருக்கின்றது

பெரும் கலவரம் நடந்திருக்கின்றது , ஒரு அமைச்சரோ மக்கள் பிரதிநிதியோ அப்பக்கமே செல்லவில்லை அதைவிட பெரும்கொடுமை இன்னும் சூழலை அரசு கட்டுக்குள் கொண்டுவரவில்லை அதற்கு ஆசையுமில்லை

விளைவு இன்னொரு துப்பாக்கி சூடு நடந்தாயிற்று

ஸ்டெர்லைட் அதிபர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரர் அவரின் ஆலை அங்குதான் இருக்கும், தடுத்தால் கொல்வோம் என சொல்லாமல் சொல்கின்றது இந்த அரசு

கொஞ்சம் யோசித்தால் பரிதாபம்

இந்த அரசு மக்கள் உருவாக்கியது, காவல்துறை வாங்கும் சம்பளம் மக்களின் வரிபணம்

தானே ஒரு அரசை உருவாக்கிவிட்டு, தன் பணத்திலே சம்பளமும் கொடுத்து அவர்கள் கையாலே சுடுபட்டு சாகும் அபலவாழ்வு தமிழனுக்கு வாய்த்திருக்கின்றது

எங்கோ இருந்து வந்த அகர்வாலுக்காக சொந்த மாநில மக்களையே கொல்லதுணிந்துவிட்ட அரசினை என்ன சொல்வது??

மனம் கனக்கும் நேரமிது

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications