ஓரளவு அர்த்தமுள்ள எதிர்ப்பு அது…

திராவிடர் திருநாளை முன்னிட்டு ஜனவரி 15, 16ல் பறையாட்டம் ஒயிலாட்டம் நடக்கும் : திராவிட கழகம் அறிவிப்பு

தமிழரின் தனிபட்ட இசைகருவி யாழ், பண்டைய தமிழ் இலக்கியம் அதனைத்தான் சொல்கின்றது, அதனை போன்ற பல உண்டு, வீணை கூட தமிழர் மரபில் ஒன்றுதான்

அவற்றை எல்லாம் இசைக்க மாட்டார்கள், ஏனென்றால் யாழும் தெரியாது, அதனை இசைக்கவும் தெரியாது, வரலாறும் தெரியாது

சும்மா எதனையாவது போட்டு அடித்து இதுதான் தமிழர் இசை, நடனம் என சொல்லி ஏதாவது செய்ய வேண்டியது

முதலில் கருப்பு சட்டையே தமிழர் பண்பாடு கிடையாடு, கருப்பு சட்டை என்பது எதிர்ப்பு உணர்வு என சொல்லிகொள்பவர்கள் இவர்கள்தான்

பின் பொங்கலுக்கு கருப்பு சட்டையோடு வந்தால் என்ன அர்த்தம்? பொங்கலை எதிர்க்கின்றார்கள் என அர்த்தம்

இல்லாவிட்டால் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்தல்லவா வரவேண்டும்? வரமாட்டார்கள், கருப்பு சட்டையில்தான் வருவார்கள்

இப்படியாக இவர்கள் காமெடி எல்லாம் ஒருவிதத்தில் அங்கிள் சைமன் போன்ற ரகம்.

இதனை பற்றி எல்லாம் நாம் கேட்டால் ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட் என்பார்கள்

(அர்த்தமுள்ள விஷயம் செய்யவேண்டுமென்றால் அதே கருப்பு சட்டையுடன் 17ம் தேதி ராமசந்திரன் கல்லறை முன்னால் நின்று கத்துங்கள்

ஓரளவு அர்த்தமுள்ள எதிர்ப்பு அது…)