ஓவியா வெளியேறிவிட்டாரா?

images.jpgஒவியா வெளியேறிவிட்டது உறுதி என செய்திகள் வருகின்றன, அந்த பைத்தியக்கார வீட்டிலிருந்து சோம்பிகள் கூட்டத்திலிருந்து அவர் வெளிவந்திருப்பது நல்லது.

நண்பர் Omm Prakash “கண்ணே.. கலைமானே.. ” என ஓவியா படத்த்தினை மடியில் வைத்துகொண்டு அந்த “மூன்றாம் பிறை” பாடலை இதுவரை பாடிகொண்டிருந்தார்

ஆனால் திடீரென கடலோர கவிதைகள் சத்யராஜாக “போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே” என்ற பாடலை பாடுவதால் விஷயம் உறுதி.

இனி ஓவியா ஆர்மி என்ன செய்யும்? குஷ்பூ சங்கம் உங்களுக்காக கதவுகளை திறந்துவைத்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கின்றோம்


 காதல் என்பது அற்பமானது, அது தொடங்கவும் முறியவும் ஒரு அற்ப காரணம் போதும் : ஜெயகாந்தன்

வயதிற்கேற்ப மனிதனின் குணமும் ரசனையும் மாறுவது போல, அவன் காதலும் மாறியே தீருவதுதான் மானிட இயல்பு : கி.பெ ராஜநாராயணன்

ஏம்பா ஓவியா ஆர்மிகளா, இதனை எல்லாம் அவரிடம் சொல்லி உங்கள் சேனையினை பாதுகாக்க கூடாதா?


 

ஓவியாவை திருமணம் செய்ய நான் தயார் : சிம்பு அதிரடி அறிவிப்பு

ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்றும், திடீர் மன உளைச்சலால் பாதிக்கபட்டார் என்றும் செய்திகள் எப்படி வந்தன என்பதன் காரணம் இப்பொழுது புரிகின்றது.

இதனை கேள்விபட்டபின் ஓவியா இவ்வளவு தூரம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்

என்ன நடந்திருக்கும்? காயூ ஆண்டியின் அம்மாவிற்கு யாரோ நல்ல ஆலோசனை கொடுத்திருக்கலாம், அவர் மிக தந்திரமாக சிம்புவின் ஆதரவினை கோரியிருக்கலாம்

அடுத்து சிம்பு ஜூலி, ரைசா ஆகியோரை திருமணம் செய்ய ஆசைபடலாம்.