கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு ஒரு பார்ட்டியில் சிக்கி இருக்கின்றார் …
கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு இப்பொழுது பார்ட்டி என்றொரு படம் எடுத்துவருகின்றாராம், படம் எடுப்பது சிக்கல் இல்லை ஆனால் ஒரு பார்ட்டியில் சிக்கி இருக்கின்றார்
பார்ட்டியில் சிக்குவது என்றால் முன்பு சோனா சர்ச்சை வந்தது போல் அல்ல, விஷயம் வேறு
ராஜபக்சே மகனும் அந்த விருந்தில் கலந்து கொண்டாராம், போதாதா? சர்ச்சை வலுக்கின்றது
தமிழின துரோகி ராஜபக்சே மகனுடன் எப்படி வெங்க்ட்பிரபு எப்படி அமரலாம் என கிளம்புகின்றார்கள், கங்கை அமரன் கெட்டிக்காரர் முன்பே மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டார்
இனி வெங்கட்பிரபு எப்படி சமாளிப்பார்
கொஞ்சம் துணிச்சல் இருந்தால் அட்டகாசமாக சமாளிக்கலாம், இப்படி கேட்கலாம்
ராஜபக்சேயின் பார்ட்னர் லைக்கா சுபாஷ்கரன் இங்கு படமெல்லாம் தயாரிக்கின்றாரே, ரஜினிக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? என கேட்டால் யார் பதில் சொல்ல முடியும்???