கச்சதீவு விவகாரத்தில் திமுக துரோகம் செய்தது, என பலர் சொல்லிகொண்டே இருக்க்கின்றனர்
கச்சதீவு விவகாரத்தில் திமுக துரோகம் செய்தது, இன்னும் பல விஷயங்களை செய்தது என பலர் சொல்லிகொண்டே இருக்க்கின்றனர்
மாநில சுயாட்சியும், மாநிலங்கள் உரிமையும் நிலைநாட்டபட்டிருந்தால் நிச்சயம் கச்சதீவு சிக்கல் வந்திருக்காது. அது மத்திய அரசின் உரிமை என்பதால் அணுகுண்டு சோதனை விவகாரம், அந்நிய நாட்டு நல்லுறவு என கச்சதீவினை கொடுத்தார் இந்திரா
சேதுபதி ராஜா காலம், போர்த்துகிசீயர் காலம், டச்சுக்காரர் காலம், பிரிட்டிசார் காலம் வரை கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தம் என்ற ஆவணங்களை எல்லாம் திரட்டி மத்திய அரசுக்கு அனுப்பி முடிந்தவரை போராடினார் கலைஞர்
அவரையும் மீறி விடாபிடியாக இருந்தார் இந்திரா, இந்திரா கொஞ்சமேனும் திருந்தியது மொரார்ஜி தேசாய் எழுச்சிக்கு பின்பே அதுவரை மிக அதிகாரமாக
“என் சொல்லே சாசனம்” என்ற ரீதியில் இருந்தவர் அவர்
போராடி பார்த்த கலைஞர் இறுதியில் அந்த ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை செய்ய சொன்னார்
அதுதான் கச்சதீவில் தமிழக மீணவர் மீன் பிடிக்கவும், வலை உலர்த்தவும் தடை இல்லை என்பதும் , தமிழர்கள் அந்தோணியார் ஆலயம் செல்ல தடை இல்லை என்பதும்
இந்த உரிமைகளை அவர்தான் பெற்றுகொடுத்தார்
பின்பு 1980களில் மத்திய அரசு சில காரணங்களுக்காக மீணவர் மீன்பிடிக்க அப்பகுதிக்கு செல்ல சிறப்பு அனுமதி வேண்டும் என்றெல்லாம் கட்டுபாடுகளை விதித்தது
அப்பொழுது இருந்த ராமசந்திரன் எனும் முதலலைச்சர் அதற்க்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை மாறாக மெரினாவினை அழகுபடுத்துகின்றேன் என சென்னை மீணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திகொண்டிருந்தார்
பின்பு புலிகள் ஆயுத கடத்தல் பெட்ரோல் கடத்தல் என அக்கடல் பகுதியில் நடத்த, புலிகள் மீதான தடை மனப்பான்மை இன்னும் பல விஷயங்களும் இலங்கைக்கு வசதியாயிற்று
விளைவு அப்பாவி மீணவர்கள் உயிரிழந்தனர், மிக சிக்கலான விஷயமாக மாறி போனது விவகாரம்
நிச்சயம் மோடி வந்தபின் துப்பாக்கி சூடு குறைந்திருக்கின்றது, ஆனால் படகுகளை பிடிக்கும் கலாச்சாரம் ஆரம்பித்துவிட்டது
இப்பொழுது புலிகள் இல்லை, பல சர்ச்சைகள் இல்லை
அந்த கச்சதீவு ஒப்பந்தபடி இதோ தமிழக பக்தர்கள் செல்லலாம், இந்த பெப்ரவரி 24ம் தேதி செல்வார்கள், தடை ஏதுமில்லை
இந்த உரிமை நிச்சயம் திமுக வற்புறுத்தலால் கிடைத்தது,
அப்படியே தமிழக மீணவர்கள் வலை உலர்த்தவும் மீன் பிடிக்கவும் தடை இல்லை என திமுக கொண்டுவந்த திருத்தத்தை, தமிழக மீணவர்கள் மீது கட்டுபாடு விதித்து 1980களின் திருத்தங்களை திரும்ப பெற்று 1970களுக்கு முன்னரான நிலையினை கொண்டுவர வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு
ஆனால் இதனை எல்லாம் வற்புறுத்துவது யார்?
ஒருவருமில்லை
1989ல் கலைஞர் முதல்வரானபொழுது அமைதிபடை, மண்டல் கமிஷன் என பிசியாக இருந்தபொழுதே அவரின் அரசு டிஸ்மிஸ் செய்யபட்டது, கச்சதீவு விவகாரத்தை எழுப்பமுடியவில்லை முழு கவனமும் அமைதிபடை விவகாரத்திலே இருந்தது
1996க்கு பின் மாநிலத்திலும் மத்தியிலும் திமுக இருந்தாலும் கச்சதீவு விஷயங்களை வற்புறுத்த நினைத்தாலும் , ராஜிவ் கொலைக்கு புலிகளை திமுக பாதுகாத்ததே காரணம் என்ற ஜெயின் கமிஷனின் அறிக்கை வந்தபின் அந்த வங்ககடலே திமுகவிற்கு கசந்தது
பின் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக குறிப்பாக புலிகள் இருந்தவரை ஒரு முடிவுக்கும் யாரும் வரமுடியவில்லை, மீணவர் சாவு தொடர்ந்தது
புலிகளின் அழிவுக்கு பின் திமுக ஸ்பெக்ட்ரம் முதல் பல சர்ச்சைகளை சந்திக்க தொடங்கி டெல்லியில் தன் பலத்தினை இழந்து, இப்பொழுது அது வழக்கில் இருந்து விடுவிக்கபட்டும் விட்டது
இடையில் வந்த ராமசந்திரன் ஆட்சியும், ஜெயா ஆட்சியும் என்ன தீர்வு கண்டது அல்லது முயன்றது என யாரும் கேட்க கூடாது, அவர்கள் ஆளமட்டும்தான் செய்வார்கள் உருப்படியாக சிந்திக்கும் திட்டமெல்லாம் அவர்களுக்கு ஏது?
இனி ஒரு காலத்தில் கச்சதீவு ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகள் அமலுக்கு வந்தால் நிச்சயம் கலைஞரை நினைப்போம்
மாநில சுயாட்சி இன்றி, மத்திய அரசின் அதிகாரத்திற்குள் மாநில முதல்வர் கோரிக்கை வைக்கும்பொழுது எவ்வளவு சாதுர்யமாக கோரிக்கை வைக்கலாம் என்பதற்கு இந்த திருத்தமே எடுத்துகாட்டு
அதனால்தான் இப்பொழுது தமிழக பக்தர்கள் உற்சாகமாக கச்சதீவு திருவிழாவிற்கு செல்ல முடிகின்றது
இதை பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள், ஆனால் இனி வருங்காலத்தில் அம்மனிதனை பல இடங்களில் நினைவு கூறும் தமிழகம்
கச்சதீவு கைமாறிய பொழுது, பலத்த ஆதாரங்களை திரட்டி மத்திய அரசோடு வாதம் புரிந்த கலைஞர், அதனை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்தார்
ஆனால் ராமசந்திரனின் அதிமுக அதனை ஆதரிக்கவில்லை, கச்சதீவினை கொடுக்க கூடாது என்ற அந்த தீர்மானத்தை அதிமுக எதிர்த்தது, அப்படி டெல்லி அடிமையாக ராமசந்திரன் இருந்திருக்கின்றார்
ஏன் எதிர்த்தாராம் தெரியுமா?
“இந்த தீர்மானம் எல்லாம் சரிவராது, திமுக ராஜினாமா செய்ய வேண்டும்”
சரி திமுக ராஜினாமா செய்யட்டும் , உங்களின் கச்சதீவு செயல்திட்டம் என கேட்டால் பதிலுக்கு ராமசந்திரனிடம் கனத்த மவுனமும் “அண்ணா நாமம் வாழ்க , ஊழல் திமுக ஒழிக” என்ற கோஷமுமே பதிலாய் வந்தது
பெரும் போராட்டம் நடத்தவும் அவர்களுக்கு தெரியாது, தவிர டெல்லி மீது பயமும் இருந்தது, அதனால் கனத்த அமைதி
திமுக ராஜினாமா செய்திருந்தால் இந்த திருத்தங்கள் ஏது? இந்த திருயாத்திரை எல்லாம் ஏது? ,
திமுக ராமசந்திரனின் எதிர்ப்பினை கண்டுகொள்ளாமல் தன் போக்கில் திருத்தங்களை செய்ய வைத்தது
ஏன் அதிமுக தமிழக விரோத கட்சி என அடிக்கடி சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான்,, ஒரு நாளும் தொலைநோக்கான நல்ல திட்டங்களை அது செய்ததும் இல்லை, ஆலோசனையாக சொன்னதுமில்லை