கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலர்
எதிர்பார்த்தபடியே கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலருக்கு எகிறிவிட்டது
ஈரான் அமெரிக்க மோதல் , ஐரோப்பிய யூனியன் பொருள் மீதான அமெரிக்க வரி உயர்வு இன்னபிற காரணங்களால் எகிறிவிட்டது எண்ணெய் விலை
உலகெல்லாம் பெட்ரோல் விலை உயர்வது போல இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கும்
மோடியினை உண்மையில் காப்பாற்றிகொண்டிருந்தது ராமர் அல்ல, மாறாக எண்ணெய் விலை
2010களில் பேரலுக்கு 120 டாலர் என்றிருந்த கச்சா எண்ணெய் விலையிலும் இங்கு பெட்ரோல் விலையினை கட்டுக்குள் வைத்தார் மன்மோகன்
மோடி வரும்பொழுது தன் விலை பேரலுக்கு 40 டாலர் என சரிந்து கிடந்தது, அப்பொழுதும் அதே பழைய விலையில் விற்று எங்கள் சாதனை பாரீர் என சொல்லிகொண்டது பாஜக அரசு
இப்பொழுது பெரும் சவாலை சந்திக்க போகின்றது, கச்சா எண்ணெய் விலை இன்னும் ஏறலாம் என்கின்றார்கள்
இனி பெட்ரோல் விலை இந்தியாவில் 80ரூபாய் தாண்டலாம், மோடி அரசுக்கு சிக்கல் எழலாம்
இந்திய யதார்த்தம் ஒருநாளும் உலகத்தை நோக்காது, ஆள்வோரை சாடியே வளர்ந்த சமுதாயம் இது, இனி எல்லாம் மோடி தலையில்தான் விடியும்
விலையினை கட்டுபடுத்தும் வித்தை மோடி கும்பலுக்கு தெரியாது. போட்டோஷார்ப் பிரச்சாரம், ஆளுநர்களை வைத்து ஆடுதல் போன்றவை தெரியுமே தவிர நிச்சயம் பொருளாதாரம் தெரியாது
இதுவரை செய்த தவறுக்களுக்கெல்லாம் தப்பிய மோடி, இனி செய்யாத தவறுகு வசமாய் மாட்ட போகின்றார்