கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தால் பெட்ரோல் விலை 1 ரூபாய் கூட்டுகின்றார்கள்
கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தால் இவர்கள் 1ரூபாய் கூட்டுகின்றார்கள்
அது விலை குறைந்தால் இவர்கள் குறைக்கவே மாட்டார்கள் என்பது வேறு விஷயம்
எமது கவலை எல்லாம், இப்படி கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தாலும் அடுத்த மைக்ரோ செக்கெண்ட் 1 ரூபாய் கூட்டும் இவர்கள் முந்தைய கச்சா எண்ணெய் விலையான 100 டாலரை எட்டினால் என்ன செய்வார்கள்?
இப்போது கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 55 டாலர், முன்பெல்லாம் 120 டாலர் வரை விற்றது
ஒருவேளை அது 120 டாலருக்கு எகிறினால்?, இந்திய நிலை என்னவாகும்?
கிட்டதட்ட 140 ரூபாய்க்கு பெட்ரோல் விலை எகிறும், நாட்டுக்காக பொறுத்துகொள் என்பார்கள், பிரதமர் கண்ணீர் வடிப்பார் இன்னும் என்னெவெல்லாமோ நடக்கும்.
ஒரு உச்ச அதிகார நபர் என்பவர் உணர்ச்சிவசபட கூடாது, அதுவும் தேசத்தை வழிநடத்தும் நபர் எக்காரணம் கொண்டும் உணர்ச்சிகளை காட்டவே கூடாது
உணர்ச்சிவசபடும் தலைவனால் ஒருபோதும் நல்ல நிர்வாகத்தை கொடுக்கவே முடியாது.
இப்படி சிவாஜி கணேசன் போல அடிக்கடி அழுதால் எப்படி?
ஆக இந்தியர்களே, உலகம் எப்படியும் நாசமாக போகட்டும் , உலக பொருளாதாரம் எப்படியும் சரியட்டும்
ஆனால் கச்சா எண்ணெய் விலை மட்டும் உயர கூடாது என வேண்டிகொள்ளுங்கள்
இந்தியர்களை இப்பொழுதெல்லாம் காக்கும் பொறுப்பு மத்திய அரசிடம் இல்லை, அது சர்வதேசத்திடமே இருக்கின்றது