கடலூரில் காபரே… இன்னும் பிற ….
அது 1982ம் ஆண்டு, மதுகடை திறப்பால் தாய்குலங்களிடம் இமேஜ் சரிந்திருந்த ராமசந்திரன் ஜெயலலிதாவினை வலுகட்டாயமாக அழைத்து வந்து கட்சியில் சேர்த்து கடலூர் மாநாட்டிலும் பேசவைத்தார்
அதன்பின் அலங்கார வாகனத்தில் ஜெயலலிதா கடலூர் தெருக்ககளில் அழைத்துவரபட்டார். அதிமுகவிலே சர்ச்சை வெடித்தது, ஆர்.எம் வீரப்பன் கோஷ்டி குதித்தது
இன்னும் ஏராளமான சர்ச்சை பேச்சுக்கள் வந்தன
முரசொலி தனக்கே உரித்தான ஸ்டைலில் செய்தி வெளியிட்டது, எப்படி?
“கடலூரில் காபரே”
அந்த அட்டகாச முரசொலி இப்பொழுது முழுக்க தன் இடிமுழக்கத்தை இழந்து நிற்கின்றது.
காவேரி நீர் கிடைக்காது, தமிழக மக்கள் கடல்நீரை குடிநீராக்கி குடிக்க வேண்டும் :சு.சாமி
குடிக்க நீர் இல்லை என்றா காவேரி கேட்டார்கள்? விவசாயத்திற்கு அல்லவா கேட்டுகொண்டிருக்கின்றோம். காவேரியில் நம் உரிமையினை கேட்டுகொண்டிருக்கின்றோம்
இந்த மனிதர் காவேரி சிக்கல் புரியாமலே பேசிகொண்டிருக்கின்றார் என்பதற்கு இதனை விட என்ன சான்று வேண்டும்
இவரை எல்லாம் பிடித்து கடல்நீரை அப்படியே குடிக்க வைத்தால் தவிர புத்தி வராது.
மிஸ்டர் சாமி, தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரும் தரமாட்டோம் என சொல்வதுதான் தேசிய நீரோட்டமா?
“பல்கலைக்கழகங்களில் ஊழல்… சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்
அதற்கு முன்பு இவர் அமைச்சராக இருந்தபொழுது மருத்துவ பல்கலைகழகங்களுக்கு அனுமதி கொடுத்த ஊழல் வழக்கில், சிபிஐ வழக்கு நடத்தும் அந்த வழக்கில் தீர்ப்பு வரவேண்டும்.