கடவுள் சிரியாவினை அழிக்காமல் விடமாட்டேன் என சொன்னாராம்

இந்த சிரிய யுத்தம் வந்தாலும் வந்தது, அழிச்சாட்டிய கிறிஸ்தவர்களின் அட்டகாசம் தாளவில்லை
மூளையினை கழற்றி அதிமுகவினரிடம் கொடுத்துவிட்டார்களா? இல்லை கடலில் எறிந்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை
அதாகபட்டது பழைய ஏற்பாட்டில் கடவுள் சிரியாவினை அழிக்காமல் விடமாட்டேன் என சொன்னாராம், அப்படி அழிக்கின்றாராம்
கடவுள் அப்படி சொன்ன காலம் என்ன? கிட்டதட்ட 3 ஆயிரம் வருடம் இருக்கலாம். ஆம், சிரியாவின் டமாஸ்கஸ் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று. இந்த யூதர்கள் எகிப்தில் அடிமையாய் இருந்தபொழுதே டமாஸ்கர் பெரும் நகராய் விளங்கிற்று
அந்த பேரரசின் பெயர் அசீரியா, இப்போது சிரியா
யூதர் இன்றைய எருசலேமுக்கு வந்தபொழுது அவர்களுக்கும் அந்த சிரிய அரசுக்கும் மோதல் வந்தது. தாவீது போன்றவர்கள் அவர்களோடு யுத்தம் நடத்தியபொழுது சொன்ன வாசகம் இவை
அப்பொழுது கடவுள் சொன்னதுதான் “உன்னை வெல்லமுடியாது, என் சமூகம் உனக்கு முன்பு செல்லும், உன்னை தொட்டவன் என் கண்மணியினை தொடுகின்றான் ” என்பதெல்லாம்
பின் யூதர்கள் படாத அடிகிடையாது, அப்பொழுதெல்லாம் கடவுள் வசனம் பேசவில்லை
அலெக்ஸாண்டரும், நெபுகாத் நேச்சரும் யூதரை ஓட ஓட அடித்தார்கள், அப்பொழுதெல்லம் கடவுள் இந்த வசனம் பேசவில்லை
இயேசு கொல்லபட்டபின் யூதர்கள் மிக சரியாக ஒவ்வொரு ஐம்பது வருட இடைவெளியில் உலகெல்லாம் அடிவாங்கி கொண்டே இருந்தார்கள், அப்பொழுதெல்லாம் இந்த வசனம் எங்கு சென்றது என தெரியாது
ஹிட்லர் அடித்தது மட்டுமே நமக்கு தெரியும் அதற்கு முன்பு ஸ்பெயின், பிரான்ஸ், ஹங்கேரி , ரஷ்யா, ஜெர்மன், உக்ரைன், துருக்கி என அவர்கள் அடிவாங்கா நாடு இல்லை
அடி என்றால் அடி எல்ல, மொத்தமாக கொத்தாக கொல்வது
இன்னும் பார்த்தால் சிரிய ஆளுநர்களே பல இடங்களில் யூத பூமியினை ஆண்டிருக்கின்றார்கள்
ரோமர் ஆட்சி, கலிபா ஆட்சி, போப்பாண்டவர் ஆட்சி, ஓட்டோமன் ஆட்சியில் எல்லாம் ஜெருசலேம் சிரிய ஆளுநரின் கீழ்யே இருந்திருக்கின்றது
ஆக இரண்டாயிரம் ஆண்டு யூதர்கள் பட்ட அடி தெரியாது, அவர்கள் அடிபடும்பொழுது இந்த வசனம் எங்கு சென்றது என தெரியாது
சிரியர்கள் முன்பு பாலஸ்தீனை ஆண்டபொழுது இந்த வசனம் எங்கிருந்தது என தெரியாது
ஆனால் மிக சமீபமாக வல்லரசுகள் விளையாட்டில் அப்படி சிரியா சீரழியும்பொழுது இவர்கள் பைபிளை தூக்குகின்றார்களாம்
வரலாறை புரட்டுங்கள். உண்மையில் இஸ்லாமியர் ஆட்சியில் யூத இனம் பாதுகாப்பாக வாழ்ந்திருகின்றது, ஆனால் இஸ்லாமியருடன் விரோதம் பாராட்டி அதுதான் பிரிந்தது
பின் ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் யூதனை ஓட ஓட அடித்திருகின்றனர், அடி என்றால் மாபெரும் அடி, மரண அடி
அவ்வகையில் கிறிஸ்தவர்களுக்கே யூதவெறுப்பு அதிகம் இருந்திருக்கின்றது, ஆனால் யூதர்களின் வெறுப்பு கிறிஸ்தவரை விட இஸ்லாமியர் மீதே அதிகம் என்பதுதான் ஆச்சரியம்
இவர்கள் ஒன்றை மறைக்கின்றார்கள். உண்மையில் யூதனுக்கு இஸ்லாமை எந்த அளவில் பிடிகாதோ அந்த அளவில் கிறிஸ்தவனையும் பிடிக்காது
ஆம் கிறிஸ்து அவர்கள் மதத்தை கெடுக்க வந்த சாத்தான். முகமது நபிக்கு எல்லா தகுதி இருந்தும் அவர் இறை தூதராக இவர்கள் ஏற்கவில்லை
ஆனால் கிறிஸ்து ஏற்படுத்திய கிறிஸ்த சாம்ராஜ்யமும், நபிபெருமானின் இஸ்லாமுமே யூதன் நாடு இழந்ததற்கும் அகதியாய் அலைந்ததற்கும் காரணம் என அவன் நம்புகின்றான்
ஜெருசலேம் தனக்கு மட்டும் என்பதில் அவனுக்கு அசைக்க முடியா நம்பிக்கை, அதனை அபகரித்த கிறிஸ்தவனும் யூதனும் அவனுக்கு எந்நாளும் எதிரி
ஒவ்வொரு யூதனின் மனதில் இருக்கும் வன்மம் அதுதான். கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் எப்படியும் சாகட்டும் என்பதில் அவனுக்கு அலாதி பிரியம்
இது தெரியாமல் இங்கிருக்கும் கிறிஸ்தவ பதர்கள் என்றோ கடவுள் தாவீது எனும் யூதனுக்கு சொன்ன வசனத்தை எல்லாம் இங்கு கொடிபிடித்து திரிகின்றார்கள்
சுத்தமாக அறிவு கெட்ட மதவாதிகள் உண்டென்றால் , முழு மூளை சலவை செய்து இஸ்திரியும் போடபட்டவர்கள் யாரென்றால் அவர்கள்தான்
தாலிபான், அல்கய்தா, ஐஎஸ் இயக்கத்தை விட மகா ஆபத்தான பிடிவாதக்காரர்கள் இவர்கள்தான்.
பைபிளை தவிர எதுவும் படிக்கமாட்டார்கள், இயேசு கொல்லபட்ட பின் பைபிள் எதுவும் சொல்லாது, அதாவது 2000 ஆண்டு யூத வரலாறு தெரியாது
ஆனால் 1948ல் இஸ்ரேல் அமைந்தவுடன் அய்யகோ கடவுள் வாக்கு பாரீர் என கிளம்பிவிட்டார்கள், ஏன் 1900 வருடம் யூதர்கள் அடிவாங்கும் பொழுது இந்த வசனத்திற்கு எல்லாம் லீவ் விட்டிருந்தார்களா?
ஏதும் சொன்னால் “உலகம் அழியபோகின்றது, நீ மனம் திரும்பு” என்பார்கள்
“நீ முதலில் நாலு விஷயங்களை படித்து திருந்து” என்றால் “அப்பாலே போ சாத்தானே” என சொல்லிவிட்டு வானத்தை பார்த்து “அதோ வருகின்றார் கிறிஸ்து அல்லேலூயா” என்கின்றார்கள், வானத்து மழையினை பார்த்து ஏமாறும் நமக்கு அது மகா கோபமூட்டுகின்றது
உலகம் அழிய போகின்றது என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அந்த சனியன்களுக்கு இந்த அழகிய உலகம் அழிவதில் அப்படி என்ன ஆனந்தமோ தெரியவில்லை
இவர்களை எல்லாம் குளியல் தொட்டி இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் கும்பலாக தங்க வைக்க வேண்டும், இப்போதைய ட்ரெண்ட் அதுதான்