கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும்

அண்ணே நீங்க திமுகவினை சாடுகின்றீர்கள், கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும் என சொல்லவந்தது ஒரு ரத்த துளி

அவனுகளாவது கொள்கை என்று ஒன்றை வைத்திருப்பார்கள், உங்கள் கொள்கை எது என கேட்டால் மனிதர் சீறிவிட்டார்

அவர் சொன்னதிலும் சில கருத்துக்கள் இருந்தன‌

“கொள்கை எல்லாம் ராஜாஜி காலத்திலே போய்விட்டது, வெள்ளையனொடு அதையும் அனுப்பியாயிற்று

(பெரியார் மண் எல்லாம் கணக்கிலே வராது, வந்திருந்தால் வீரமணி பெரும் சக்தி ஆகியிருப்பார்..)

அதன் பின் நடப்பதெல்லாம் அரசியல். அண்ணாவின் எழுத்துக்கும் கலைஞரின் சுவாரஸ்யத்தையும் மீறி ராமசந்திரனுக்கு மக்கள் அபிமானம் இருந்தது

இதை கணகிட்ட டெல்லி அவரை பிரித்து காமராஜருடண் இணைக்க முயற்சித்தது கிட்டதட்ட ஆந்திர சிரஞ்சீவி ஸ்டைல்

ஆனால் காமராஜருக்கு தயக்கம் இருந்தது, காமராஜரிடம் ஒருவித மோசமான குணம் இருந்தது, அதாவது அரசியலில் நேர்மையாளர் சந்தேகமில்லை ஆனால் கட்சிக்குள் இன்னொருவரை வளரவிட மாட்டார்

ஈவிகேஎஸ் சம்பத் எல்லாம் இப்படித்தான் காணாமல் போனார், ராமசந்திரனை இணைக்கவும் தயக்கம் இருந்தது

இதனால் தனிகட்சி கண்டார் ராமசந்திரன் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை ஆனால் தமிழகம் அவரை கொண்டாடியது

அண்ணே அவருக்கு அரசியல் தெரியாது, திராவிடம் புரியாது ஆனால் தன்னை நம்பியவர்களுக்கு கொடுத்தார்

யார் யாரை எல்லாமோ தூக்கிவிட்டார், தமிழகம் அவரை கொண்டாட அதுதான் காரணம், கட்சிக்குள் புதிதாய் வந்தவரை எல்லாம் அமைச்சர் ஆக்கினார், பெரும் பொறுப்பு கொடுத்தார்

அதிமுகவில் சேர்ந்தால் சீக்கிரம் பொறுப்பு கிடைக்கும், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நிலைக்கு அது கியாரண்டியான கட்சியாக இருந்தது அவர் முதல்வராகவே இறந்தார்

பின் ஜெயா அப்படி வந்தார், அவரும் அப்படியே புதுமுக எம்.எல்.ஏ எல்லாம் அமைச்சராக முடிந்தது, பெரும் பொறுப்பு பெற முடிந்தது

காலில் விழுந்தொம், டயரை நக்கினோம் என்பதெல்லாம் வேறுகதை, அவனவன் கம்பெனியில் முதலாளி முன் குனியவில்லையா? குட்டிகரணம் அடிக்கவில்லையா அப்படி

ஆனால் அவர் முன்னால் குனிந்தோமே தவிர கட்சிக்குள் நிமிர்ந்தோம் , யாரும் எப்பொழுதும் அமைச்சராகலாம் எந்த பதவிக்கும் வரலாம் என்ற நிலை இருந்தது

அதே நேரம் மாவட்ட செயலாளரோ வட்டமோ அமைச்சரோ ஏதும் நிரந்தரம் என நினைத்தால் முதுகில் மிதிக்கபட்டு விரட்டவும் பட்டார்கள்

புதுமுகங்களை தூக்கிவிட்டதுதான் அதிமுகவின் வெற்றிக்கு காரணம், சாகும் பொழுதும் ஜெயா முதல்வராகவே மறைந்தார்

இப்பொழுதும் பாருங்கள் ஜெயாவிற்கு பின் கட்சி தலமையாக பன்னீர் செல்வம், பழனிச்சாமி என யாரோ வரமுடிகின்றது

திமுகவில் இதெல்லாம் முடியுமா? அதிமுகவில் இருக்கும் இம்மாதிரி விஷயங்கள் திமுகவில் நடக்குமா?

ஒருகாலமும் நடக்காது

அங்கு தலமை முதல் மாவட்ட செயலலாளர் வரை 50 வருடமாக எல்லாம் விளம்பரம்

ஒப்புகொள்கின்றோம் அவர்களுக்கு கொள்கை உண்டு, வரலாறு உண்டு இன்னபிற அடையாளம் உண்டு

ஆனால் மக்கள் பெரும் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்றால் எல்லாமே அங்கு நிரந்தரம், அடுத்து இவர்தான் என எளிதாக கணிக்கபடும் விஷயம் இன்னபிற‌

ஆனால் அதிமுகவில் சுவாரஸ்யமே அடுத்தவர் யாரென தெரியாது, அடுத்தது நாம் என ஆளாளுக்கு துடிப்பார்கள் அதில் சிலருக்கு வாய்ப்பும் கிடைக்கும்

இதுதான் அதிமுகவின் வெற்றி, இன்னும் நிலைத்து நிற்கும் காரணம்

இப்பொழுதும் பாருங்கள் பழனிச்சாமி அமைதியாக ஆட்சி புரிகின்றார், டெல்லி காக்கின்றது மோடி பிடி கொடுக்கின்றார் என்பதெல்லாம் இன்னொரு பக்கம்

ஆனால் தமிழக அரசியல்வாதியாக பழனிச்சாமி உருவாகின்றார், அவர் இன்னும் சில வருடங்களை நிறைவு செய்துவிட்டால், வெற்றிகரமாக முடித்துவிட்டால் தனி அடையாளம் பெற்றுவிடுவார்

பழனிச்சாமிக்கே வாய்ப்பு அப்படி என்றால் நமக்கும் வராதா என ஆளாளுக்கு அவர் பின் வருவார்கள், காரணம் யாரும் முதல்வராக வாய்ப்பு உள்ள கட்சி அதிமுக‌

இது நிச்சயம் நடக்கும் இருந்து பாருங்கள், அடிதட்டு தொண்டனும் மிக உயரிய இடத்திற்கு வருவது பாஜகவிலும், அதிமுகவிலும் மட்டுமே சாத்தியம்

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

அவை ஆளும் கட்சியாக வலுவோடு இருப்பது இதனால்தான், ஊழல் குற்றசாட்டு தீர்ப்பு இன்னபிற விஷயங்கள் நடந்தும் ஜெயா நிலைத்து நின்றது இந்த நுட்பத்தில்தான்

நிச்சயம் இரண்டும் கொள்கை பிடிப்போ, கோட்பாடோ கொண்ட கட்சி அல்ல, காமெடி ரகம் சந்தேகமில்லை

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் மரியாதை கொடுக்கும் கட்சி, தொண்டனுக்கு அதிசய வாய்ப்புகளை கொடுக்கும் கட்சி

இதனால்தான் இவை ஆளும் கட்சியாக நிற்கின்றது, காங்கிரசும் திமுகவும் வாரிசு அரசியல், உட்கட்சி வாரிசு அரசியலால் தவிக்கின்றன‌

திமுகவில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அடுத்த தலைவர் யார் என இப்பொழுதே எல்லோராலும் சொல்லமுடியும், காங்கிரசிலும் சொல்ல முடியும் , பிரியங்காவிற்கும் குழந்தைகள் உண்டு

ஆனால் அதிமுகவில் அடுத்த தலைவர் யாரென சொல்ல முடியுமா? யாரும் வரலாம்

எங்கள் கட்சி அசைக்கமுடியா இடத்தில் இருக்க இதுதான் காரணம்

அடுத்த தேர்தலிலும் பாருங்கள் எங்களுக்கும் குறிப்பிட்ட இடம் கிடைக்கும், காரணம் இது லக்கி பிரைஸ் கட்சி அதிர்ஷ்டம் யாருக்கும் அடிக்கலாம் எனபதால் உற்சாகமாக உழைக்க வருவார்கள்

மற்ற கட்சிகளில் எல்லாமே நிரந்தரம் என்பதால் தங்கள் எல்லை அவர்களுக்கு தெரியும் என்பதால் சுணங்குவார்கள்

எதிர்கட்சிகள் இப்படி இருக்கும் வரை எங்களுக்கு என்ன கவலை, அரசியல் கொள்கை வேறு, யாதார்த்த களம் வேறு

களத்தில் நாங்கள்தான் ஹீரோ

பாருங்கள் ராமசந்திரன் இறந்தார் ராமாவரத்தில் ஒருமாதம் அன்னதானம் வழங்கினார்கள், அறிவாலயத்தில் ஒரு பிஸ்கட் கொடுப்பார்களா என்றால் இல்லை, காரணம் அவர்கள் அப்படித்தான்

திமுகவின் சரிவு இதுதான் , இதே பிஸ்கட் கொடுக்காத கதைதான் கட்சி பதவிகளிலும் இருக்கின்றது, அதன் இயக்கத்திலும் இருக்கின்றது

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

இருந்து பாருங்கள் இன்னும் வெல்வோம், முகநூலில் உங்களை சீண்டி பின்னூட்டமும் நீ சங்கி என திட்டுகின்றார்களே அவர்களால் கட்சிக்கு 5 பைசா லாபமுமில்லை, லாபம் வந்தாலும் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்க போவதுமில்லை

அதனால் அந்த இம்சைகளை கண்டுகொள்ளாமல் உங்கள் போக்கில் எழுதுங்கள்

அவர்களை நினைத்தால் எங்களுக்கே பாவமாகத்தான் இருக்கின்றது, விட்டு தள்ளுங்கள்”