கண்ணதாசனின் “மேய்பனும் ஏய்பனும்” எனும் கட்டுரை

Image may contain: 1 person, smiling, close-up

வாய்ப்பிருந்தால் கண்ணதாசனின் “மேய்பனும் ஏய்பனும்” எனும் கட்டுரையினை படித்துபாருங்கள்

இந்த சொத்துகுவிப்புகளை அன்றே கணித்து சொன்ன அறிஞன் அவர்

மிக மிக பிரமாதமான கட்டுரை அது, இணையத்தில் அது இல்லை என்பதால் பதிவேற்றமுடியவில்லை

அதன் சுருக்கம் இதுதான்

நாட்டின் பெரும் விடுதலை நோக்கி கிளம்பிய படை, போர்பரணி பாடி கிளம்பிய படை வழியில் தங்கசுரங்கத்தை பார்த்துவிடுகின்றது

இனி என்ன போர்? தங்கத்தை கொடுத்தே வெற்றியினை அடையலாம் என மல்லாக்க கிடக்கின்றது

போர்கருவிகளை வீசிவிட்டு எல்லோரும் நகை பூணுகின்றார்கள், கவசங்களை கழற்றிவிட்டு தங்க நகை அணிகின்றார்கள்

போர்குரல் மெல்லிசை பாட்டாக மாறுகின்றது, வாள் வீசிய கரங்கள் நடனமாடுகின்றன‌

எங்கிருந்து போர் நடக்கும்? எங்கிருந்து விடுதலை கிடைக்கும்.

ஒரு புரட்சிபடை சிக்கிய புதையலால் புரட்டுபடை ஆனது”

இப்படி தனக்கே உரித்தான மிக அற்புதமான வரிகளால் பின்னி எடுத்திருப்பார் கண்ணதாசன்

ஆம், அவர் எதனை நினைத்து எழுதினாரோ தெரியாது (தெரியும் ஆனால் சொல்லமாட்டேன்)

ஆனால் ஊழலற்ற கட்சி என தொடங்கிய ராமசந்திரனின் கட்சிக்கு மிக அழகாக பொருந்துகின்றது

படியுங்கள், நிச்சயம் எல்லோரும் ரசிப்பீர்கள், அதுவும் இந்த ரெய்டு சமயத்தில் படித்தால் கொட்டும் மழையில் ஜன்னல் ஓரத்தில் சாரல் பட்டபடி சிலோன் டீ குடிக்கும் ஒருவித ஏகாந்தம் கிடைக்கும்