கண்ணீர், அழுகை , புகழ்மாலை என கடும் துக்கம்..

7 நாள் தமிழக அரசு துக்கமாம்,தமிழகமெல்லாம் துக்கம் என பத்திரிகைகள் எழுதி தள்ளுகின்றன, தமிழகமே மொட்டை அடித்து கதறுவதாக ஜெயா டிவி கதறுகின்றது, நண்பரில் ஒருவர் கூட நேற்றெல்லாம் அழுதபடி இருந்தார்.

கண்ணீர், அழுகை , புகழ்மாலை என கடும் துக்கம்

தமிழகம் முழுக்க 19 பேர் இறந்ததாக ஒரு செய்தி தூக்கிவாரி போட்டது, நண்பரின் பெயர் அதில் இல்லை எனினும், வங்கடல் அருகே புரண்டு அழுவார், ஆறுதல் சொல்லலாம் என அழைத்தோம்

“எங்கிருக்கின்றாய்

3 நாள் லீவு, எங்கேயும் போகமுடியவில்லை, வீட்டில்தான்

இன்னும் துக்கமா?

பின்ன இருக்காதா? எனக்கு பிடிக்காதுதான் ஆனா பார்த்துட்டு தாங்க முடிலடா, சாப்ட கூட இல்ல, அவங்க‌ இன்னும் கொஞ்சநாள் இருந்துருக்கலாம்டா

சரி இன்னைக்கும் லீவா

சொன்னேன்ல 3 நாள் லீவு

சரி என்ன செய்கிறாய்?

லீவுல என்ன செய்ய? மீன் கிடைக்கல, சிக்கன் பிரியாணி, பிரை மட்டும்தான். டாஸ்மாக் எல்லாம் மூடிட்டாங்க அதான் கொஞ்சம் வெறுப்பா இருக்கு, நாளைக்கு ஏதும் படத்துக்கு போணும்

ஏன்?

போரடிக்குதுடா, வெளிய எங்கேயும் போனா சிக்கல், இல்லாவிட்டால் ஏதும் மகாபலிபுரம் போல இடத்திற்கு செல்லலாம்

துக்கம் அனுசரிக்கவா?

இல்லடா கொஞ்சம் நேரம் போகும் அவ்வளவுதான்

அந்த கல்லறைக்கு போகவில்லையா?

இல்லடா, போனா அழுகையா வரும், எப்படிபட்ட ஆளுமை தெரியுமா?

கொஞ்சம் மட்டன் பிரியாணியும், இறால் வறுவலும் தின்னுட்டு போ அழுகை குறையும்”

இப்படித்தான் தமிழகத்தில் பலபேர் துக்கம் அனுசரிக்கின்றார்களாம்.

அவர் இறந்ததை விட அவரால் தொடங்கபட்ட டாஸ்மாக் அடைக்கபட்டதில்தான் பலருக்கு மகா துக்கம்

இதில் அடக்கம் அமைதியாக நடந்தது என செய்திகள் வேறு, கடையினை அடைத்தால் அமைதி தானக வந்துவிடுகின்றது அவ்வளவுதான்.

இதில் பன்னீர் அரசு அமைதியாக நடத்தியது, சசிகலா கட்டளைக்கு கிடைத்த வெற்றி என பெருமை வேறு

டாஸ்மாக்கினை மூடிவிட்டால் எல்லா ஊர்வலமும் அமைதியே என்பது விளங்கி இருக்கின்றது.

இனி கடை திறக்கபடும்பொழுது எத்தனை கோடி இலக்கு டாஸ்மாக் வைத்திருக்கின்றது என தெரியவில்லை

திறக்கட்டும், அதன் பின் “துக்கம்” அனுசரிப்பது என்றால் தமிழகத்தில் என்ன? என்பது கொஞ்சம் விளங்கலாம்

நேற்று போலிசாருக்கு சவால் இல்லா நாளாக இருக்கலாம், கடை திறந்த பின் ஜெயலலிதா சமாதிக்கு மட்டும் பத்து பட்டாலியன் படையினர் காவலுக்கு இருக்கவேண்டி வரும்.

தமிழகம் முழுக்க 19 பேர் இறந்ததாக ஒரு செய்தி தூக்கிவாரி போட்டது, நண்பரின் பெயர் அதில் இல்லை எனினும், வங்கடல் அருகே புரண்டு அழுவார், ஆறுதல் சொல்லலாம் என அழைத்தோம்

“எங்கிருக்கின்றாய்

3 நாள் லீவு, எங்கேயும் போகமுடியவில்லை, வீட்டில்தான்

இன்னும் துக்கமா?

பின்ன இருக்காதா? எனக்கு பிடிக்காதுதான் ஆனா பார்த்துட்டு தாங்க முடிலடா, சாப்ட கூட இல்ல, அவங்க‌ இன்னும் கொஞ்சநாள் இருந்துருக்கலாம்டா

சரி இன்னைக்கும் லீவா

சொன்னேன்ல 3 நாள் லீவு

சரி என்ன செய்கிறாய்?

லீவுல என்ன செய்ய? மீன் கிடைக்கல, சிக்கன் பிரியாணி, பிரை மட்டும்தான். டாஸ்மாக் எல்லாம் மூடிட்டாங்க அதான் கொஞ்சம் வெறுப்பா இருக்கு, நாளைக்கு ஏதும் படத்துக்கு போணும்

ஏன்?

போரடிக்குதுடா, வெளிய எங்கேயும் போனா சிக்கல், இல்லாவிட்டால் ஏதும் மகாபலிபுரம் போல இடத்திற்கு செல்லலாம்

துக்கம் அனுசரிக்கவா?

இல்லடா கொஞ்சம் நேரம் போகும் அவ்வளவுதான்

அந்த கல்லறைக்கு போகவில்லையா?

இல்லடா, போனா அழுகையா வரும், எப்படிபட்ட ஆளுமை தெரியுமா?

கொஞ்சம் மட்டன் பிரியாணியும், இறால் வறுவலும் தின்னுட்டு போ அழுகை குறையும்”

இப்படித்தான் தமிழகத்தில் பலபேர் துக்கம் அனுசரிக்கின்றார்களாம்.

அவர் இறந்ததை விட அவரால் தொடங்கபட்ட டாஸ்மாக் அடைக்கபட்டதில்தான் பலருக்கு மகா துக்கம்

இதில் அடக்கம் அமைதியாக நடந்தது என செய்திகள் வேறு, கடையினை அடைத்தால் அமைதி தானக வந்துவிடுகின்றது அவ்வளவுதான்.

இதில் பன்னீர் அரசு அமைதியாக நடத்தியது, சசிகலா கட்டளைக்கு கிடைத்த வெற்றி என பெருமை வேறு

டாஸ்மாக்கினை மூடிவிட்டால் எல்லா ஊர்வலமும் அமைதியே என்பது விளங்கி இருக்கின்றது.

இனி கடை திறக்கபடும்பொழுது எத்தனை கோடி இலக்கு டாஸ்மாக் வைத்திருக்கின்றது என தெரியவில்லை

திறக்கட்டும், அதன் பின் “துக்கம்” அனுசரிப்பது என்றால் தமிழகத்தில் என்ன? என்பது கொஞ்சம் விளங்கலாம்

நேற்று போலிசாருக்கு சவால் இல்லா நாளாக இருக்கலாம், கடை திறந்த பின் ஜெயலலிதா சமாதிக்கு மட்டும் பத்து பட்டாலியன் படையினர் காவலுக்கு இருக்கவேண்டி வரும்.