கந்தபுராணம் : 04

சூரபதுமனே தோற்று திரும்பிய நிலையில் அசுரனின் அரண்மனை ஆடிகிடந்தது, மறுநாள் போருக்கு செல்ல துணிந்தான் பானுகோபன்

பானுகோபன் ராவணன் மகன் இந்திரஜித்தனின் சாயல், நீர் ஆகாயம் என சகல வித்தைகளும் அறிந்தவன், யாராலும் வெல்லமுடியாதவன்

சூரியனையே வென்று தூக்கிவந்து தன் அரண்மனையில் தொங்கவிட்ட வீரன் அவன்

ஆனாலும் தன் கண்முன்னே தன் சகோதரர்களை வெட்டிபோட்ட வீரபாகுவினை நினைத்து அவன் மனம் குமுறிற்று அதே நேரம் தன்னையே நிராதாயுதபாணியாக்கி மன்னிப்பு கொடுத்த முருகனை எண்ணி அவன் மனம் அஞ்சிற்று

சூரனிடமே ஆலோசனை கேட்டான் பானுகோபன், இதனால் பானுகோபனுக்கு சில ஆலோசனைகளை சொல்லி அவன் வீரபாகுவினை பிடித்து கொண்டு தன் காலடியில் போட உத்தரவிட்டான்

என்ன ஆலோசனை சொன்னான்?

வீரபாகுவினை உயிரோடு பிடிப்பது என்பது முடியாத கதை, இதனால் அவனை மூர்ச்சித்து அப்படியே தூக்கிவர ஒரு உபாயம் சொன்னான்

சூரன் தன் தாயான மாயாதேவியிடம் இருந்து பலமான ஒரு அஸ்திரம் வாங்க சொன்னான், அதன் பெயர் மோகன அஸ்திரம் அது பாயுமிடம் எல்லோரும் மயங்கி கிடப்பார்கள், மூர்ச்சையாவார்கள்

ஆம் அதற்கு கட்டுபட்டால் முடிந்தது விஷயம், கட்டுபடாவிட்டால் அது ஒன்றும் செய்யாது எனினும் அதன் தன்மைக்கு கட்டுபடாதவர் இருக்க முடியாது, மயக்கி வீழ்த்தும் ஒரு ஆயுதம் அது

மாயாதேவியும் அதை பானுகோபனுக்கு வழங்கினாள்

பானுகோபன் பலம் வாய்ந்தவன் என்பதால் அவனிடம் பாஸ்பத கனையும், இன்னு நீரிலும் நிலத்திலும் ஆட்டுவிக்கும் பல பலமான அஸ்திங்களும் இருந்தன‌

முந்தையதை விட இம்முறை பலமாகவும் மோகன அஸ்திரம் உள்ளிட்டவற்றுடனும் களம் புகுந்தான் பானுகோபன், வீராபாகுவினை கட்டி தூக்கிவருவதே அவன் ஒரே நோக்கமாய் இருந்தது

வீரபாகு பானுகோபன் யுத்தம் புராணத்தில் பிரசித்தியான ஒன்று

கடும் போரில் இருவரும் சளைக்காமல் பலமான அஸ்திரங்களை எறிந்து போரிட்டனர், இரு பக்கமும் யுத்தம் வலுத்தது

அப்படி ஒரு எதிர்ப்பை பானுகோபனும் பார்த்ததில்லை வீரபாகுவும் பார்த்ததில்லை

இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பதால் உலகமே அதிரும் வண்ணம் யுத்தம் தொடர்ந்தது, ஆனாலும் பானுகோபனால் வீரபாகுவினை நெருங்க முடியவில்லை

அசுரனுக்கு எப்பொழுதுமே கெட்ட குணமும் மூர்க்கமும் அதிகம் அல்லவா? பானுகோபன் பிரமாஸ்திரத்தை விட வலிமையான பாசுபத அஸ்திரத்தை எய்தான்

அது மகா கடுமையானது என்பதால் பெரும் அழிவினை கொடுக்க கூடியது என்பதால் பதிலுக்கு அதே அஸ்திரத்தை வீரபாகுவும் எறிந்தார்

இரு பாசுபத கனைகளும் ஒன்றையொன்று எதிர்த்து நின்று பெரும் அக்னி ஜூவாலைகளை கொடுத்தது, கடலே வற்ற தொடங்கியது

சமுத்திர ராஜன் கலங்கி நின்றான், மானிட கடல்வாழ் உயிர்களெல்லாம் அழியும் நிலை வந்தது

இப்பக்கம் முருகனும் அப்பக்கம் சூரபத்மனும் இதை உணர்ந்தனர். உலகமே அழியும் பெரும் மோதலில் இருவருமே அஸ்திரங்களை திரும்ப பெற்றனர் இல்லாவிட்டால் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும்

பிரமாஸ்திரத்துக்கு பதில் அஸ்திரம் வீரபாகுவிடம் இருப்பதால் யுத்த வியூகத்தை மாற்றினான் பானுகோபன்

தன் ஜெகஜால வித்தையினை காட்டினான் பானுகோபன்

வானம் ,கடல், நிலம் என மாறி மாறி நின்று தாக்கினான், அவனின் உத்தியில் வீரபாகுவுக்கு திகைப்பே வந்தது

எங்கிருந்து எப்படி தாக்குவான் பானுகோபன் என தெரியாத நிலையில் வீரபாகு குழம்பினார், திடீரென வானிலிருந்து தாக்கும் அவன் அப்படியே மறைந்து கடலில் இருந்து அஸ்திரம் எறிவான், திடீரென நிலத்துக்கு வந்து அடித்துவிட்டு மாயாவியாய் மறைவான்

வீரபாகுவினை நன்றாக குழப்பிவிட்டு பின் சட்டென அந்த வல்லமை மிக்க மோகன அஸ்திரத்தை எடுத்து வீசினான் பானுகோபன்

மோகன் அஸ்திரத்திடம் இருந்து தப்ப வழிதெரியா வீரபாகு அதனிடம் சிக்கி மூர்ச்சை அடைந்தான், அவனோடு வீரபாகுவின் இதர படைகளும் மூர்ச்சையாகின‌

வீரபாகுவினை அப்படியே கட்டி பானுகோபன் தூக்க முயலும் பொழுது முருகன் தன் வேலை வீசினார், வேல் பட்ட நேரம் மோகனாஸ்திரம் தன் வல்லமையினை இழந்தது, விழித்தெழுந்த வீரபாகு பானுகோபனை விரட்ட அவன் கடலடியில் ஒளிந்தான்

அத்தோடு அவனுக்கு இருந்த பிரத்யோக இன்னொரு வரத்தை பயன்படுத்தினான், அது இன்னும் விவகாரமானது

தான் நீருக்கடியில் இருந்து சண்டையிடுவது போல் வீரபாகுவின் சேனைகளையும் இழுத்து மூழ்கடிக்க நினைத்தான், அந்த யுத்த களத்தையே நீருக்குள் இழுக்க முயன்றான் பானுகோபன்

ஆம் அந்த இடத்தை மூழ்கடிக்க பெரும் அலைகளை அனுப்பினான், இன்னும் பலவித நீரை கட்டுபடுத்தும் ஆயுதங்களை பிரயோகித்தான்

சுனாமி போன்ற மாபெரும் அலைகள் அடிக்க ஆரம்பித்தன‌

அந்த அலைகள் முருகனையே தொட்டு இழுக்க ஆரம்பித்தபொழுது தன் வேலை கடல் நோக்கி வீசினார் முருகன், அந்த பானுகோபன் அங்கேயே செத்தான்

தேவர்களும் வானோர்களும் பூமாரி பொழிய விஷயம் அசுரனுக்கு தெரிய அவனின் இன்னொரு மகனனான அந்த இரணியன் வந்தான்

இரணியன் ஓரளவு நல்லவன், சூரபதுமனிடம் எவ்வளவோ சொல்லிபார்த்தான் ஆனால் சூரன் திருந்தவில்லை
யுத்தம் என வந்த இரணியன் மீன் வடிவெடுத்து கடலில் ஒளிந்து கொண்டான்

கடும் ஆத்திரம் அடைந்த சூரன் தன் மகன் அக்னிமுகனை அனுப்பினான், இவனே சூரனின் கடைசி மகனாக எஞ்சியிருந்தான்

அக்னிமுகனிடம் ஒரு அபார பக்தி இருந்தது அது பத்ரகாளியின் பக்தி, எங்கே அவன் யுத்தம் செய்தாலும் அங்கு தான் வந்து காப்பதாக அந்த காளி உறுதி அளித்திருந்தது

அப்படி அவன் செல்லுமிடமெல்லாம் அந்த காளியும் வரும்

வீரபாகுவுக்கு எதிராக அக்னிமுகன் வந்து போரிட்டபொழுது அந்த காளியும் வந்தாள், சக்தி வாய்ந்த அந்த காளிக்கும் வீரபாகுவுக்கும் இடையே பெரும் போர் நடந்தது

ஒரு கட்டத்தில் வீரபாகு சிவ அம்சம் உள்ளவன் என்பது தெரிந்ததும் காளி ஒதுங்கினாள், அன்னையே என்ன கெஞ்சினான் அக்னிமுகன்

“நல்லோர்களை எதிர்த்து அதுவும் சிவ அம்சம் உள்ளோரை எதிர்த்து என்னால் போரிட முடியாது” என சொல்லிவிட்டு சென்றாள் காளி

காளி நீங்கியதும் ஒரே அடியில் அக்னிமுகன் சின்னாபின்னமானான்

இதை அடுத்துத்தான் களம் புகுந்தான் அந்த சூரபத்மனின் கடைசி பலமான அந்த சிங்கமுகன், அவன் கதையினை நாளை பார்க்கலாம்

இந்த பானுகோபன் கதை ஒரு போர் என்றால் போர், ஆன்மீக தத்துவம் என்றால் தத்துவம்

ஆம், எவ்வளவு வல்லவனாய் இருந்தாலும் நீர், நிலம், வான் என எவ்வளவு வல்லவனாய் இருந்தாலும் அதர்மத்திற்காய் தர்மத்தை அழிக்க நினைத்தால் அவன் அழிவான்

இந்த நீர், நிலம், வான் வெளி சண்டை எல்லாம் அதீத கற்பனை, புராண கற்பனை என ஒதுக்கிவிடமுடியாது
கடல் நடுவில் நாடாம், வானிலும் கடலிலும் காவலாம் என்பதெல்லாம் இன்று சாத்தியம்

100 ஆண்டுகளுக்கு முன்புவரை அவை கற்பனை என சொல்ல வாய்பிருந்திருக்கலாம் ஆனால் இன்று இதெல்லாமே சாத்தியம்

இந்த வீரபாகுவும் பானுகோபனும் நிகழ்ந்த்திய சண்டையினை பாசுபத கனை, கடலடி ஆட்டத்தை எல்லாம் அமெரிக்க ஏவுகனைகளும் ரஷ்ய நீர்மூழ்கிகளும் எளிதில் நடத்திவிடும்

ஆம், இன்றைய நவீன காலத்தை இனி வரபோகும் அதிபயங்கர நவீன காலத்தை என்றோ சொல்லி இதெல்லாம் சாத்தியம் இவை எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது என சொன்னது இந்துமதம்

அவற்றில் இருந்து தெய்வத்தின் அருள் ஒருவனை காக்கும் மானிட இனத்தை தர்மத்தை காக்கும் என சொன்னதும் இந்துமதம்

இதை ஆன்மீக கண்ணோடு இன்னும் நோக்கலாம்

அதர்மம் எப்பொழுதும் பலமாக இருக்கும் அதைவிட முக்கியம் செழிப்பாகவும் இருக்கும். அது விதி ஆனால் அழியும் நேரம் வரும்பொழுது ஒவ்வொன்றாய் அழியும்

நிலம் நீர் ஆகாயம் என எல்லா வழியிலும் மாயை ஒருவனை இழுத்து செல்லும், அதில் வலுகவனமாக இருத்தல் அவசியம்

அந்த பானுகோபனின் மோகன அஸ்திரம் நுட்பமாய் கவனிக்கதக்கது, அதை வழங்கியவள் மாயா தேவி அதன் வேலை மயக்கி கட்டிபோடுவது

ஆம், உலக வாழ்வில் ஒரு மனிதனை கட்டி போடும் எல்லா மாயையும் ஒரு மயக்க மோகனமே. அது மது, மங்கை, பணம் , ராஜ்யம் என எதுவாகவும் இருக்கலாம். அந்த மயக்கம் ஒருவனின் கர்மத்தின் வழியில் இருந்து கட்டி தூக்கும் வல்லமை கொண்டது

அதை வெல்ல முருகனின் திருவடி அவசியம், அவன் வழங்கும் ஞான வேல் அவசியம்

இன்னும் பல விஷயங்களை சொல்கின்றது கந்தபுராணம், இறைவன் அடி பணிந்தோர் அசுரன் என்றாலும் வாழ்வர் என்பதை இரணியனின் கதை சொல்கின்றது

மகா முக்கியமாக அந்த காளி, அக்னிமுகனுக்கு வரும் காளி தெளிவாக ஒரு தத்துவத்தை சொல்கின்றது,
எக்காலமும் துணையிருப்பேன் என சொன்ன காளி அன்று அவனை கைவிட்டதேன்?

காளி பொய் சொன்னதா? அல்ல.

மாறாக தெய்வம் யாருடைய பக்திக்கும் கட்டுபடும். அதற்கு நல்லோர் தீயவர் எனும் வேறுபாடே இல்லை. ஆனால் அதர்ம வழியில் செல்லும் ஒருவனுன் தெய்வம் வராது

கொடுமதியாளன் ஒரு தெய்வத்தை வழிபட்டால் அவன் வாழ்வான், நிச்சயம் வாழ்வான் ஆனால் எதுவரை வாழ்வான் என்றால் அந்த பலத்தால் தர்மவான்களையும் நல்லவர்களையும் இறைவன் பாதம் அண்டியவர்களையும் தொந்தரவு செய்யாதவரை வாழ்வான்

அப்படியே வாழ்வானா என்றால் அதுதான் விதி, அப்படி ஒரு கொடியவனும் வாழ்வதில்லை அவனின் அகங்காரமும் அறிவீனமும் இன்னும் பல துர்குணமும் நல்லோரிடம் வம்பிழுக்க வைத்து அழிவினை கொடுக்கும்

இது வரம் வழங்கும் தெய்வத்துக்கு தெரியாதா என்றால் தெரியும், பின்பும் ஏன் கெட்டவனுக்கு அது வரம் அருளுகின்றது

அப்படியாவது அவன் நல்லோரிடன் வம்பிழுத்து போராடி தோற்று தெய்வத்தின் உண்மை ஞானத்தை அடைந்து நல்லவனாக மாறிவிடமாட்டானா என்பதன்றி வேறல்ல‌

சூரபத்மனுக்கு பெரும் வரம் தெய்வம் கொடுத்தது, அவன் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான், கடைசியில் என்ன ஆனான்?

ஞானம் பெற்று இறைவன் தாழ் பணிந்தான்

பொல்லோர் வளமுடனும் செல்வத்துடனும் அவர்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்பொழுது நல்லவர்கள் மனம் காலங்க கூடாது, காரணம் அவர்களும் ஒரு காலம் ஞானம் பெற இறைவன் நடத்தும் ஆட்டம் அது
இதை கந்தபுராணம் தெளிவாக சொல்கின்றது

கந்த புராணத்தில் பக்தி, அறிவியிய, ஆன்மீகம், விஞ்ஞானம், அரசியல், பாசம், போர் என எவ்வளவோ இருகின்றது

முருகனே மானிடபெண் வள்ளியினை மணந்த அதாவது மனிதரோடு உறவு கொண்ட முதல் தேவர்குலத்தவராக அறியபடுவதால் கந்தபுராணமே ராமயண காலத்தைவிட முந்தையது என கருதலாம்

(தொடரும்..)