கந்துவட்டி சாவு சினிமா உலகில் …
நெல்லை கந்துவட்டி கொடுமை சில உயிர்களை பறித்த வலி ஆறா நிலையில் அடுத்த கந்துவட்டி சாவு சினிமா உலகில் நடந்திருக்கின்றது
தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் வட்டி கொடுமையால் தற்கொலை செய்திருக்கின்றார்
இது எதனை காட்டுகின்றது என்றால், நெல்லையில் நடந்த பரிதாப கொடுஞ்சாவு கொஞ்சமும் அரசின் மனசாட்சியினை உலுக்கவில்லை, எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்பதை காட்டுகின்றது.
இப்பொழுது அசோக்குமாரின் வாக்குமூல கடிதம் சுட்டிகாட்டும் அன்புசெழியன் என்பவர் ஜி.வி தற்கொலையிலே கடுமையாக குற்றம்சாட்டபட்டார்
ஆனால் அப்பொழுது சசிகலா ஜெயலலிதா எனும் முகமூடி போட்டு ஆண்டுகொண்டிருந்தார், சினிமா உலகை தன் காலடியில் வைக்கவேண்டும் என்ற தமிழக ஆளும்கட்சி தத்துவத்திற்கு அவரும் விதிவிலக்கா?
சசிகலாவின் இடக்கை, வலக்கை , அல்லக்கை என சொல்லபட்ட அன்புசெழியன் மீது யாரும் கை வைக்கவில்லை, கை என்ன? யாரும் வாய் கூட திறக்கவில்லை
சம்பிரதாயத்திற்கு கைது செய்யபட்டார், அதன் பின் விடுவிக்கபட்டார் , நான் சசிகலாவின் ஆள் என அவர் பகிரங்கமாக சொன்னதாக செய்தி, சசிகலாவும் அதனை மறுக்கவில்லை
வழக்கு என்னாயிற்று என் தெரியவில்லை, மனிதர் மறுபடி அதே தொழிலுக்கு வந்து தில்லாக அமர்ந்தார்.
அதன் பின் வந்த படங்களின் டைட்டில்கார்டுகளில் எல்லாம் அன்புசெழியனுக்கு நன்றி என சொல்லியே படங்கள் வந்தன
சினிமா தயாரிப்பாளர் ஒருவர் அவரால் செத்திருக்கின்றார் என்ற வருத்தமே இல்லாமல் வழக்கம்போல் சினிமாக்காரர்கள் அன்புசெழியன் வாழ்க என சொல்லிகொண்டே இருந்தனர்
இப்பொழுது அசோக்குமார் என்பவரும் இறந்திருக்கின்றார், மிக ஆணிதரமாக அவரின் வாக்கு மூலம் அன்புசெழியனை சுட்டிகாட்டுகின்றது
ஆனால் ஊடகங்களிலும், சினிமா துறையிலும் ஒரு சத்தமும் இல்லை எல்லாம் கப்சிப்
ஜிஎஸ்டி என்றாலோ, வேறு சர்ச்சை என்றாலோ வரிந்துகட்டும் திரையுலகம், தங்கள் தயாரிப்பாளர் ஒருவர் செத்திருக்கும்போது கொஞ்சமும் சட்டை செய்யவில்லை
காரணம் தயாரிப்பாளர்களை விட அவர்களுக்கு பணமும் , படத்திற்கு தியேட்டரும் கொடுக்கும் அன்புசெழியன், விவேக் போன்றவர்களே இவர்களுக்கு மகா முக்கியம்
இந்த அரசு இதற்கும் ஏதும் நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை
அன்று ஜிவி இன்று அசோக்குமார் என பட்டியல் நீள்கின்றது. அது இருவரோடு முடிந்து தொலைய அரசு ஏதாவது செய்யட்டும்.
நிச்சயம் அவர்களுக்கான நியாயம் கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது, தமிழக யதார்த்தம் இது
ஆனால் இன்னும் பலர் தொங்கி சாகுமுன் காப்பாற்றலாம்,