கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோவின் இந்திய பயண சர்ச்சை…

Image may contain: 4 people, people smiling, people standing and outdoor

ஒரு விஷயம் சர்ச்சையாகின்றது, கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோவின் இந்திய பயணமது

அதாகபட்டது இந்த அகில உலகில் பென்குயின்கள் வாழும் அண்டார்டிக்கா தவிர எல்லா நாட்டிற்கும் சென்று, அவர்களை கட்டி தழுவது, புது பாசத்தை வெளிப்படுத்துவது, அவர்கள் நழுவி சென்றாலும் தேடி பிடித்து கை குலுக்குவது என புது நாகரீகத்தை தொடங்கி வைத்தவர் மோடி

அத்தோடு விட்டாரா என்றால் இல்லை, இந்தியாவிற்கு அயல்நாட்டு அதிபர் பிரதமர் வந்தால் ஓடி சென்று வரவேற்பார் மோடி. அதுவும் இஸ்ரேலிய பிரதமர், ஜப்பான் பிரதமர் வந்தபொழுதெல்லாம் கையில் பெயர் அட்டையுடன் விமான நிலைய வாசலிலே காத்து கிடந்தார் என கலாய்க்கும் அளவுக்கு அவர் வரவேற்பு இருந்தது

அப்படி எல்லாம் அயல்நாட்டு விருந்து பிரமுகர்களை உபசரிக்கும் மோடி அரசு கனடா பிரதமரை மரியாதையாக வரவேற்கவில்லை, கூட்டறிக்கை எல்லாம் வெளியிடவில்லை

கனடா பிரதமரும் இந்திய குடியரசு தலைவர் வாசல், மோடி வாசலில் எல்லாம் சென்று நிற்கவுமில்லை அது அவருக்கு அவசியமுமில்லை

அவர் போக்கில் வந்தார், யாரும் கண்டுகொள்ளவில்லை கீழ்நிலை அதிகாரிகள் மட்டும் வரவேற்றார்களாம்

டில்லியில் இந்நிலை என்றால் தாஜ்மஹால் காண சென்ற கன்டா பிரதமரை தாஜ்மஹால் மட்டும் வரவேற்றிருக்கின்றது, அந்த சாமியார் அரசும் கண்டுகொள்ளவில்லை

அரசியலில் வைகோ, ராமதாஸ் போல , சினிமாவில் ராமராஜன் போல 
அனாதையாக இந்தியாவில் சுற்றியிருக்கின்றார் கனடா பிரதமர்

கனடிய பிரதமருக்கு இந்தியாவில் அவமானம் என செய்திகள் வர தொடங்கியாயிற்று.

இவ்வளவிற்கும் இந்தியாவிற்கு யுரேனியம் தருவதாக ஒப்புகொண்ட நாடு பின் ஏன் மோடி அரசு இப்படி செய்தது?

விஷயம் இருக்கின்றது

கனடாவில் சீக்கியர் அதிகம், இன்றும் அதிகம் அந்நாட்டின் அரசை தாங்கும் அளவு பணக்கார சீக்கியர்கள் அங்கு உண்டு, பல்லாண்டு காலமாக உண்டு

இதனால் காலிஸ்தான் சீக்கிய தீவிரவாதிகளுக்கு கனடா அடைக்கலமும் உதவியும் கொடுக்கின்றது என்ற சந்தேகம் எந்நாளும் இந்திய அரசுக்கு உண்டு, , கன்டா அமைச்சர் பஞ்சாப் வந்தபொழுது முன்பு இதே அவமதிப்பு சர்ச்சை நடந்தது

காலிஸ்தான் சர்ச்சையில் சிக்கிய சீக்கியர்களோடு ட்ருடோ அமைச்சரவை சகாக்கள் பகிரங்க தொடர்பில் இருப்பதால் இந்தியா இப்படி நடந்ததாக சில தகவல்கள் சொல்கின்றன‌

இந்திய தரப்பு அதிகாரிகள், “அப்படி எல்லாம் அல்ல, விதிமுறைகள் பின்பற்றபடுகின்றன” என சொன்னாலும் இந்திய மேலிடம் வாய்திறக்கவில்லை

இனி என்னாகும்?

சீக்கியரை போன்றே ஈழதமிழரும் கனடாவில் அதிகம், புலிதமிழரும் அதிகம், ஏதோ அமெரிக்காவின் நெருக்கடியால் புலிகள் மீது முன்பு கனடா தடை விதித்தது, பின் விலக்கியது

இனி அங்கிள் சைமன் கோஷ்டிக்கு கனடா “அரைஞாண் கொடி” உறவு ஆகலாம், அல்லது தமிழரின் “சின்னம்மா” கன்டா ஆகலாம்