கனிகளிலே அவள் மாங்கனி மலர்களிலே அவள் மல்லிகை…

Image may contain: 1 person, standingதனக்கு மிக பிடித்த படம் இதுவென தலைவி இன்று காலை 12.29 மணிக்கு அறிவித்துவிட்டார்

இனி இப்படம் சங்கத்து முத்திரையாக அறிவிக்கபடுகின்றது, ரசிக கண்மணிகள் வீட்டை எல்லாம் அலங்கரிக்க போகும் படமிது.

ரவிவர்மன் வரைந்த ஓவியத்தின் சாயலில் இதனை படமெடுத்தார்களாம், ரவி வர்மன் இவ்வளவு அழகான ஓவியத்தை வரைய முடியாமல் ஏதோ வரைந்திருக்கின்றான்

ஆக ரவிவர்மனாலும் வரைய முடியாத பெரும் அழகு பெட்டகம் குஷ்பூ என வரலாறு குறித்துகொள்கின்றது.

சங்கம் இதனை எண்ணி பெரு மகிழ்ச்சி கொள்கின்றது.

“கனிகளிலே அவள் மாங்கனி
மலர்களிலே அவள் மல்லிகை….”

படமெடுத்தவர் ஏதோ வெங்கட்ராம் என்பவராம். அவர் தலைவியிடம் ரவிவர்மன் படங்களை பார்க்கும்பொழுதெல்லாம் குஷ்பூ நினைவு வரும் என சொல்லித்தான் இந்த படமெடுக்க அனுமதி வாங்கினாராம்

அன்ன்னாரை சங்கம் பொற்குவியலுடன் வரவேற்க காத்திருக்கின்றது, அந்த வெங்கட்ராம் எங்கிருந்தாலும் உடனே சங்கத்தில் வந்து இணைய அழைக்கின்றோம்

(இந்த செய்தி விகடனில் வந்தது, இப்பொழுதெல்லாம் விகடன் மிக பொறுப்பாக பணி செய்கின்றது. சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்)