பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கனிமொழி கவிதைகள்…

No automatic alt text available.

 

கனிமொழி என் இலக்கியவாரிசு என நேரடியாக சொல்லி அவர் அரசியல்வாரிசு அல்ல என மறைமுகமாகவும் சொன்னவர் கலைஞர்

இலக்கிய வாரிசான‌ கனிமொழியினை பின் ஏன் எம்பி ஆக்கினார் எனது கலைஞரின் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

அந்த கனிமொழி அவ்வப்போது கவிதை எல்லாம் எழுதுவார், அது கலைஞரின் சில வரிகள் போல ஓரளவுதான் புரியும், சில நேரம் கமலஹாசன் பேச்சை போலவே இருக்கும்

கனிமொழி கவிதையினை ரசித்து கைதட்ட மனுஷ் போன்ற பெருங்கவிகள் முன்பு உண்டு. இப்பொழுது மனுஷ் முக ஸ்டாலினை புகழ்ந்துகொண்டிருப்பதால் இப்பக்கம் வரவில்லை

இந்நிலையில் கலைஞரை நினைத்து கனிமொழி கவிதை ஒன்றினை வடித்துவிட்டார், வடிக்கட்டும் சிக்கல் இல்லை. ஆனால் அதன் சில வரிகள் பலருக்கு கண்களை சிவக்க வைக்கின்றன‌

என்ன கவிதை?

கலைஞர் இல்லா ஊரில் அவர் உடன்பிறப்புக்கள் ரத்தம் ஆறாய் ஓடுகின்றதாம், இவர்கள் ஊர் கூடி இழுத்தாலும் தேர் வரவில்லையாம் அதனால் கலைஞர் வரவேண்டுமாம்

இது போக கலைஞரின் பாணியில் சாதி,மதம் வட்டமிடும் கழுகு, ஓநாய், வாள்
என முரசொலி பிராண்ட் வார்த்தைகள்

இதில் இருவரிகள் சிக்குகின்றன‌

முதலில் கலைஞர் இல்லா ஊரில் உடன்பிறப்புக்கள் ரத்தம் ஓடுகின்றன என்றால் எந்த திமுகவினர் செத்தார்கள்? ஒரு பயலுமில்லை

செத்த 13 பேரும் பொதுமக்கள். அவர்களை பாஜக நக்சலைட் என சொல்ல, கனிமொழியோ திமுக உடன்பிறப்பு என்கின்றார்

கனிமொழி சொன்னதை சரிசெய்ய இனி யாரும் கீதா ஜீவன் மண்டையில் ஒரே போடாக போடலாம், அம்மணி கவனமாய் இருப்பது நன்று

இன்னொரு வரி ஊர்கூடி தேர் இழுத்தாராம் நகரவில்லையாம்

அதாவது திமுக போராட்டம் தோல்வி என்பதும் , எதிர்பார்த்த எழுச்சியினை கொடுக்கவில்லை என்பதும் இதன் பொருள். அப்படியானால் என்ன அர்த்தம் செயல்தலைவரை சாடுகின்றாராம்

உண்மையில் தேர் நகராமல் இருக்க இரண்டே காரணம், ஒன்று தேருக்கு பின்னால் இழுத்துபிடிக்கும் பழனிச்சாமியும் தேரை கல்லில் கட்டியிருக்கும் மத்திய அரசும் காரணம்

இரண்டாம் காரணம் தேருக்கு தடைகல்லாக இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள், அவர்கள் இருக்கும் வரை தேர் நகராது

எப்படியோ திமுக சரி இல்லை என்பதை கனிமொழி ஒப்புகொண்டுவிட்டார்

இது இனி என்னாகும்?

ஸ்டாலின் ஆதரவு மனுஷ் அடுத்த இம்சை கவிதையினை இனி வெளியிட கனிமொழி தரப்பு சும்மா இருக்குமா?

கவிஞர் சல்மா என ஒரு ஆட்டுகுட்டியினை ஏன் இழுத்துகொண்டே திரிகின்றார், ஆக சல்மாவிடம் இருந்து அடுத்த கவிதை வரும்

இப்படியாக கவிதை போர் ஆரம்பமாகும், அந்த இம்சைகளை பார்த்து தொலைக்க வேண்டும்

(ஆனாலும் கலைஞர் பாணியிலே வசனகவிதை என வந்துவிட்டார் கனிமொழி வாழ்த்துக்கள்

எனினும் கலைஞர் எழுதினால் ரட்சகன் எனும் வடமொழி வார்த்தை வந்திருக்காது, அவர் அவ்வளவு கவனமாக இருந்திருப்பார்

அது இருக்கட்டும் இப்பொழுது முக ஸ்டாலின் எங்கிருப்பார் மனுஷ், வைரமுத்து போன்றோருடன் கவிதை டியூசனில் இருக்கலாம்..)

 
 
 
 
 
 

 

 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications