கனிமொழி மீது சுமத்தபட்டிருக்கும் குற்றசாட்டு

கனிமொழி மீது சுமத்தபட்டிருக்கும் குற்றசாட்டு, ராசாத்தி அம்மாள் மீது சொல்லபட்ட குற்றசாட்டு என்ன?

கலைஞர் டிவி தொடங்கபட்டு கொஞ்ச நாளைக்குள் 200 கோடி லாபத்தில், டிவி தொடங்கபட வாங்கிய கடன் அடைக்கபட்டது என்பது.

அதாவது அப்படி எல்லாம் வருமானம் வர வாய்ப்பே இல்லை, இதெல்லாம் முறைகேடு என சொல்லி பெரும் ஆர்பாட்டம் செய்து, வழக்குதொடுத்து அவரை சிறையில் அடைத்து இன்னும் தீர்ப்பு வரவில்லை.

குற்றசாட்டு என்பது மேற்கண்டதுதான்

ஆனால் பொத்தம் பொதுவாக ஸ்பெக்ட்ரம் ஊழல், கனிமொழியும் ராசாவும் 1 லட்சத்தி 75 ஆயிரம் கோடி எடுத்துவந்து கோபாலபுரத்தில் அடுக்கினார்கள் என பெரும் பழிகளை எல்லாம் கிளப்பிவிட்டார்கள். தமிழக மூலை முடுக்கெல்லாம் இது செய்தியானது

இதோ அமித்ஷா மகனின் கம்பெனி ஒருவருடத்தில் 16 ஆயிரம்மடங்கு லாபம் சுழற்றியிருக்கின்றது. அது பற்றி கேட்டால் அது வியாபாரம், தொழில் திறமை, இது கம்பெனியில் சுற்றிவந்த பணம் என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள்.

ஒரு விசாரணை , வழக்கு என ஏதுமில்லை அது தேவையே இல்லை என்கின்றது மத்திய அரசு.

கலைஞர் டிவி 200 கோடிரூபாய் கொடுத்து கடனை அடைத்தால் அது முறைகேடாம், ஆனால் அமித்ஷா மகன் கம்பெனி 16 ஆயிரம்மடங்கு லாபம் பணத்தினை கையாண்டால் அது தொழில் சாமார்த்தியமாம்.

ராசா அமைச்சராக இருந்தபொழுது கஜானாவிற்கு வரவேண்டிய 1.75 லட்சம் கோடி வரவில்லை, குறைவாக வந்தது அது ஊழல் , அதில்தான் கலைஞர் டிவி கடன் அடைக்கபட்டது என்றேல்லாம் கிளப்பினார்கள், கட்டுகதை மூட்டைகளை அவிழ்த்தார்கள்

ஆனால் இதோ பாஜக ஆட்சியில் அதே துறையில் கஜனாவிற்கு வரவேண்டிய 4 லட்சம் கோடியில் 10ல் ஒருபாகம் தான் வந்திருக்கின்றது, அதே நேரம் அமித்ஷா மகன் கம்பெனியில் பல்லாயிரம் கோடிகள் புரள்கின்றன.

இதைபற்றி எல்லாம் யாரும் பேசவில்லை, பேசமாட்டார்கள்.

கனிமொழி, கலைஞர் என்றால் குதியோ குதி என குதித்தவர்களை இந்த அமித்ஷா விஷயத்தில் காணவே இல்லை

இதுதான் பத்திரிகா தர்மம். வழக்கமாக அதிரடி காட்டும் சுப்பிரமணியன் சாமி எல்லாம் சத்தமே இல்லை.

கலைஞர் பாணியில் சொல்வதென்றால், “சூத்திரன் மீது ஏதோதோ சொல்லி கோட்டான்களாக கத்துவார்கள், ஆரிய சாதிக்கு ஒரு ஆபத்தென்றால் மனை விழுங்கிய மலைபாம்பு போல அமைதியாகிவிடுவார்கள்”

இந்த பெரும் அநியாயத்தை எல்லாம் எடுத்து சொல்லி தன் கட்சி மீதான களங்கத்தை துடைக்க வேண்டியது திமுககாரர்களின் கடமை

அவர்களோ இந்த செல்லூர் ராஜூ போன்றவர்களை கலாய்பதிலும், தலித் அர்ச்சகர் என வீரமணி பின்னாலும் சென்றுகொண்டிருக்கின்றார்கள்.

உடன்பிறப்புக்களே கலைஞர் வழியில் சிந்தியுங்கள், இந்த செல்லூர் ராஜூ, வீரமணி பின்னால் திரிந்தீர்கள் என்றால் அவர்களை போலவே ஆகிவிடுவீர்கள்.