கன்னடத்தான் அட்டகாசம் ஆரம்பித்தாயிற்று
ரஜினி படத்தை விடமாட்டோம், கமல் படத்தை விடமாட்டோம் என கன்னடத்தான் அட்டகாசம் ஆரம்பித்தாயிற்று
இங்கோ கன்னடத்து அனுஷ்காவினை தேடி அழைத்து கொண்டிருக்கின்றான் தமிழன்.
அனுஷ்காவினை விடுங்கள், எவனாவது கர்நாடக பொன்னி வேண்டாம் என்றோ , பெங்களூர் தக்காளி முதலான காய்கறி வேண்டாம் என்றோ, ரோஜா வேண்டாம் என்றோ சொல்லவே இல்லை
கன்னடம் ஒழிக என கத்துபவன் எல்லாம் கர்நாடக பொன்னி அரிசிசோறுதான் விழுங்குகின்றானாம்
இவர்களை எல்லாம் காவேரி துரோகிகள் என பிடித்து முதலை வாயில் போட வேண்டாமா?
பெரும்பாலான மில்களுக்கு கன்னட பருத்தி வருகின்றது என்கின்றார்கள், அவர்களோ இப்பொழுதே கன்னட பருத்தி வாங்கி ஸ்டாக் வைக்கின்றார்களாம்
நிச்சயம் ஐடி தொழிலாளி ஒருவனும் பெங்களூருவினை எதிர்க்கமாட்டான்
இப்படியாக பல கன்னட ஆதரவு வேலைகள் மகா ரகசியமாக நடக்கின்றன, அதனை எல்லாம் கண்டுகொள்ள யாருமே இல்லை