கன்னடத்தில் அச்சத்தின் உச்சியில் பாஜக இருப்பது தெரிகின்றது

தொண்டர்கள் மக்களை கை கால்களை கட்டி தூக்கி வந்து வாக்களிக்க வைக்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருக்கின்றார் எடியூரப்பா

வாக்களித்தபின் அந்த மக்களை கொல்வதா வேண்டாமா என அன்னார் இன்னும் முடிவு சொல்லவில்லை

போகிற போக்கில் இனி கழுத்தில் கத்தி வைத்து வாக்கு வாங்குவார்கள் போல‌

பாஜக ஒரு மாதிரி கட்சிதான், அதற்காக இந்த அளவிற்கு எல்லாம் மிரட்டினால் என்னாகும்?

கன்னடத்தில் அச்சத்தின் உச்சியில் பாஜக இருப்பது தெரிகின்றது, கருத்து கணிப்புகளும் சங்கு என்றே சொல்கின்றன‌

ஒருவேளை பாஜக‌ படுதோல்வி அடைந்தால் உடனே காவேரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ய்பு உண்டு

அதனால் எடியூரப்பா இன்னும் பேசட்டும், வோட்டு போடவில்லை என்றால் கழுத்தை அறுங்கள் என சீறட்டும், பாஜக தோற்கட்டும்

அப்படியாவது காவேரி வரட்டும்

என்ன ராசியோ தெரியவில்லை, இந்தியா எங்கும் சர்ச்சை கிளப்புவர்கள் பாஜகவில்தான் இருக்கின்றார்கள்