கன்னடர் அரசியல்

தேர்தலில் தமிழகம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் முடிவையே கொடுக்கும்

அது சனியனோ, சாமியோ எதுவென்றாலும் அறுதி பெறும்பான்மையில் அமரவைக்குமே தவிர வேறு வாய்ப்பு அளிக்காது

இதில் கன்னடம் சுத்த மோசம், பெரும்பாலான நேரங்களில் தொங்கு சட்டமன்றம் என கவிழ்த்துவிடும், காவேரி தவிர அவர்களிடம் ஒரு ஒற்றுமையும் இராது

முன்பு கூட்டணி எல்லாம் உலகில் இல்லாதபடி படு மோசமாக அமைந்தன‌

எப்படி என்றால் நீ ஆறுமாதம் முதல்வர், நான் ஆறுமாதம் முதல்வர் என கடும் அவமான அழிச்சாட்டியம் எல்லாம் செய்தார்கள்

இம்முறை மும்முனை போட்டி, கருத்து கணிப்புகளை பார்த்தால் ஆளுக்கு 4 மாதம் என ஆள்வார்கள் போல‌