கன்னட சேனல்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது!

கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஒரு வணிக வரிதுறையினர் வீட்டில் சோதனை நடத்தி 7 ஆயிரம் சேலைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர்

அவை விலை உயர்ந்தவை என செய்திகள் சொல்கின்றன‌

சேலை பறிமுதல் செய்ததை சும்மா சொன்னாலும் பரவாயில்லை

இன்னும் 3 ஆயிரம் சேலைகள் கூடுதலாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் சாதனையினை அம்மணி முறியடித்திருப்பார் என குறிப்பிட்டு கன்னட மீடியாக்கள் சொல்கின்றன‌

ஆம் ஜெயா 10.500 சேலைகள் வைத்திருந்தார் என்பது குற்றசாட்டு

ஜெயாவிற்கு ஏன் அவ்வளவு சேலைகள்??

சட்டசபையில் என் சேலையினை கிழித்தார்கள் என முன்பு அழுதவர் ஜெயா, ஒருவேளை அப்படி கிழிய கிழிய கிருஷ்ணனா காப்பாற்றுவான்? நாம்தான் மாற்றுசேலை வைத்து கொள்ளவேண்டும் என ஜெயா நினைத்திருக்கலாம்.

அதாவது எல்லாவற்றிற்கும் தயாராக அம்மணி இருந்திருக்கின்றார்

சரி இப்படி சேலை சிக்கியதற்கு எல்லாம் கன்னட மீடியாக்கள் ஜெயவினை ஒப்பிட்டு ஏன் செய்தி பரப்பவேண்டும்?

கன்னட சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி செய்திகள் பார்க்கின்றார் என்கின்றார்கள்

மொழி புரியாவிட்டாலும், சேலை பெண்களுக்கு புரியாதா? அதனை பார்த்தவுடன் புரியாத பெண்கள் உண்டா?

அதுவும் சசிகலாவிற்கு புரியாதா?

ஆனாலும் கன்னட சேனல்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.